அண்ணாசாலை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு 3 வேளையும் தரமான உணவு மற்றும் டீ, காபி, பால் வழங்கப்படும் என மருத்துவமனை சிறப்பு அதிகாரி ரமேஷ் தெரிவித்தார்.
சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை கடந்த 21-ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்த மருத்து வமனையில் இதயம், இதய அறுவை சிகிச்சை, நரம்பியல், சிறுநீரகம், மயக்கவியல், ரத்த நாளம் என மொத்தம் 9 சிறப்பு துறைகள் செயல்படுகின்றன. மற்ற அரசு மற்றும் தனியார் மருத்து வமனைகளில் இருந்து மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 400 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பன்னோக்கு மருத்துவமனை சிறப்பு அதிகாரி ரமேஷ் கூறியதாவது: ஏழை, எளிய மக்களுக்கு தரமான உயர் சிகிச்சை அளிக் கவே, இந்த மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. மருத்துவ மனையில் தற்போது 400 படுக்கை கள் உள்ளன. விரைவில், 500 படுக்கைகளாக உயர்த்துவோம். தனியார் மருத்துவமனையில் வழங்கப்படுவதுபோல, இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் 3 வேளையும் தரமான உணவு, அவர்களின் படுக்கைக்கே சென்று வழங்கப்படும். மேலும் டீ, காபி, பால் கொடுக்கப்படும்.
நோயாளிகளைப் பார்க்க வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சாப்பிடுவதற்காக கீழ் தளத்தில் தமிழ்நாடு ஓட்டல் திறக்கப்பட்டுள்ளது. டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் பணியாளர்கள் சாப்பிடுவதற்காக 3-வது தளத்தில் கேன்டீன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனை வளாகத் துக்குள் பிளாஸ்டிக் பை, கவர் கொண்டுவர முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. உணவுப் பொருட் களை பிளாஸ்டிக் கவர்க ளில் எடுத்து வருவதைத் தவிர்த்து, பாத்திரங்களில் எடுத்து வரலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.