ராமநாதபுரம் மாவட்டம் ஏ.ஆர்.மங்கலம் கிராமத்தில் இளைஞர் ஒருவர் அரிவாள் மட்டும் கடப்பாறையால் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலியாகினர், 5 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த 5 பேரும், ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொலையாளிக்கு முன்விரோதம் ஏதும் உள்ளதா இல்லை அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.