தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் தமிழகத்திலும் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக 5 செ.மீ. மழை பெய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், ஆடுதுறை ஆகிய இடங்களில் 4 செ.மீ., அரியலூர் மாவட்டம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 3 செ.மீ. மழை பெய்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.