அரசுப் பணிக்கு விண்ணப்பிக்க சான்றொப்பம் தேவையில்லை: தமிழக அரசு உத்தரவு

By செய்திப்பிரிவு

அரசுப் பணிக்கு விண்ணப்பிக்க இனி சான்றொப்பம் (அட்டெஸ் டேஷன்) தேவையில்லை என தமிழக அரசு உத்தரவிட் டுள்ளது.

அரசுப் பணிக்கான விண்ணப்பங்களில் அரசு பதிவுபெற்ற கெசட்டட் அதிகாரி அல்லது நோட்டரி பப்ளிக் ஆகியோரிடம் சான்றொப்பம் பெற வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. இது மாணவர்கள் முதல் வேலை தேடும் இளைஞர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் கடும் சிரமமாக இருந்தது.

சான்றொப்பம் அளிக்கும் அதிகாரிக்கு ரூ.100 முதல் ரூ.500 வரை கொடுக்கவேண்டி இருந்தது. இதனால் கிராமப் புற மக்கள் பெரிதும் அவதிக் குள்ளாகின்றனர். குறிப்பாக பழங்குடியின மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

கடைசி தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் விண்ணப் பிக்க முடிவதில்லை. அத்துடன், அரசு அலுவலகங்களில் தேவையின்றி விண்ணப்பங்கள் குவிவதை தடுக்கவும், எளிய நடைமுறைகளை பின்பற்றும் நோக்கிலும், இனிமேல் விண்ணப்பிக்கும் நபரே தனது விண்ணப்பத்தில் சான்றொப்ப கையெழுத்தை போட்டுக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நேர்முகத் தேர்வுக்கு வரும்போது மட்டும் அசல் சான்றிதழை சமர்ப்பித்தால் போதும்.

இதற்கான உத்தரவை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை முதன்மைச் செயலாளர் டேவிதார் கடந்த மாதம் 23-ம் தேதி பிறப்பித்த அரசாணையில் தெரிவித் துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE