ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் ஏற்காததால் தமிழகத்தில் இருந்து வந்த அதிமுக வழக்கறிஞர்கள் ஆத்திரம் அடைந்தனர்.
'இந்த ஒரே மனுவை மட்டும் நம்பி வந்தது ஏன்?' என ஜெயலலிதாவின் வழக்கறிஞர்களை அவர்கள் கடிந்து கொண்டனர்.
மேலும் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை சந்தித்து, ''இது முற்றிலும் மனிதாபிமானம் அற்றது. உங்களிடம் இருந்து இதனை எதிர்பார்க்கவில்லை. ஜெயலலிதாவின் நிலைமையை ஒரு நிமிடம் நினைத்துப் பார்க்க வேண்டாமா?''என கோபத்துடன் கேட்டனர்.