உள்ளாட்சி தேர்தல்: காங்கிரஸ் புறக்கணிப்பு

By செய்திப்பிரிவு

உள்ளாட்சி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென் னையில் புதன்கிழமை தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியதாவது:-

தமிழக அரசியலில் சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி இடைத்தேர்தல் எப்படி நடைபெறுகிறது என்பதை நாம் அறிவோம்.

தமிழகத்தில் எதிர் கட்சிகள் இதுபோன்ற இடைத் தேர்தல்களைச் சந்திக்க இயலாத சூழ்நிலை இருக்கிறது. தேர்தலில் நிற்பது என்பது அரசியல் கட்சிகளின் ஜனநாயகக் கடமை என்றாலும்கூட, நிலவுகிற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நடைபெறவுள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட் டியிடுவதில்லை என்று முடிவு எடுத்திருக்கிறோம்.

காங்கிரஸ் தலைமையிடமான சத்தியமூர்த்தி பவனில் இம்மாதம் 30-ம் தேதி சத்தியமூர்த்தி, காமராஜர் சிலைகள் திறந்துவைக்கப்படும். இந்த விழாவில் கேரள முதல்வர் உம்மன்சாண்டி, தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்நிக் உள்ளிட்டோர் பங்கேற் கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE