லட்சத்தீவு அருகே மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடதமிழகத்தை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மிதமாகவும், தென் மாவட்டங்களிலும் லேசான மழையும் எதிர்பார்க்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் காரணமாக பல பகுதிகளில் இடியுடன் மழை பெய்து வருகிறது.