3 ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்ட யோகா போட்டி

தமிழ்நாடு பெண்கள் யோகா அமைப்பு மற்றும் பதஞ்சலி யோகா மற்றும் ஆராய்ச்சி கல்லூரி சார்பாக 8-ம் ஆண்டு தேசிய அளவிலான யோகா போட்டிக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கர்நாடகம், ஒடிஸா, பஞ்சாப், மத்திய பிரதேசம், உள்ளிட்ட 13 மாநிலங்களில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

குழுக்களுக்கான போட்டியின் சுழல் கோப்பையை நங்கநல்லூரை சேர்ந்த மாடர்ன் உயர் நிலைப் பள்ளி மாணவர்கள் முதல் பரிசும், காஞ்சிபுரத்தை சேர்ந்த சுவாமி விவேகானந்தா மேல்நிலை பள்ளி மாணவர்கள் இரண்டாவது பரிசும், சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ஐசிஎப் மேல் நிலை பள்ளி மாணவர்கள் மூன்றாவது பரிசும் வென்றனர்.

தனிநபர்களுக்கான ஆண்கள் பிரிவில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த விஷ்ணு சக்கரவர்த்தி, பெண்கள் பிரிவில் கவுதமி ஆகியோருக்கு சைக்கிள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு பெண்கள் யோகா சாம்பியன் பரிசு பொள்ளாச்சி சாய் அகாடமி முதல் பரிசும், நாகர்கோவிலை சேர்ந்த ஏடிஎம் மகளிர் கல்லூரி 2வது பரிசும் வென்றனர்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் கிரேஸ் ஹெலினா பரிசுகளை வழங்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE