நடிகர் அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மதுரை இளைஞரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை திருவான்மியூரில் உள்ள நடிகர் அஜீத் வீட்டில் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளது என்று கடந்த 29-ம் தேதி ‘108' ஆம்புலன்ஸ் சேவைக்கு ஒரு நபர் போனில் கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். உடனடியாக அஜீத் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி, வெடிகுண்டு தகவல் புரளி என்று தெரிவித்தனர்.
பின்னர், மிரட்டல் விடுத்தவர் பேசிய செல்போன் எண்ணை வைத்து நடத்தப்பட்ட விசாரணை யில், அந்த நபர் மதுரையில் இருப் பது தெரிந்தது. அதைத் தொடர்ந்து திருவான்மியூர் போலீஸார் மதுரை சென்று வினோத்(23) என்ற இளை ஞரை கைது செய்து அழைத்து வந்த னர். வினோத்திடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, தனது செல் போன் தொலைந்து விட்டதாகவும், அதை வைத்து யாரோ மிரட்டல் விடுத்துள்ளனர் என்றும் கூறினார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.