மாநில கல்லூரி மாணவர்கள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு: போலீஸ் விசாரணை

By செய்திப்பிரிவு

மாநில கல்லூரி வளாகத்துக்குள் நடந்த மோதலில் 2 மாணவர் களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

சென்னை மாநில கல்லூரி மாணவர் பேரவை தேர்தல் சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்தது.

இதில் வெற்றி பெற்ற அணியினருக்கும், தோல்வியுற்ற அணியினருக்கும் அடிக்கடி மோதல் நடக்கிறது.

வெற்றி பெற்ற அணியை சேர்ந்த அருண்குமார்(20), அகஸ்டின்(20) ஆகியோர் செவ்வாய் கிழமை காலையில் கல்லூரி வளாகத்துக்குள் நடந்து சென்றபோது, தோல்வியுற்ற அணியை சேர்ந்த மாணவர்கள் சிலர் இருவரையும் சுற்றி வளைத்து அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டினர். இதில் இருவருக்கும் தலை உட்பட உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது.

திருவல்லிக்கேணி துணை ஆணையர் கிரி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரை யும் மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.

தாக்குதலில் ஈடுபட்ட மாணவர் களில் 2 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE