திருச்சி இனாம் குளத்தூரில் 19 விரைவு ரயில்கள் 5 நாட்கள் நின்று செல்லும்

முஸ்லிம்களின் கூட்டுப் பிரார்த்தனை நிகழ்ச்சி நடப்பதால் திருச்சி இனாம் குளத்தூரில் 19 விரைவு ரயில்கள் 2 நிமிடங்கள் தற்காலிகமாக நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

திருச்சி இனாம் குளத்தூரில் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை இஜ்திமா கூட்டுப் பிரார்த்தனை நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் ஏராளமானோர் பங்கேற்பார்கள். அவர்களின் வசதிக்காக அந்த வழியாகச் செல்லும் விரைவு ரயில்கள் வரும் 25-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை 2 நிமிடங்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வைகை, திருவனந்தபுரம் இன் டர்சிட்டி, குருவாயூர், பாண்டியன், கன்னியாகுமரி, திருச்செந்தூர், திருநெல்வேலி, கொல்லம், பொதிகை, தூத்துக்குடி விரைவு ரயில்கள் உட்பட மொத்தம் 19 விரைவு ரயில்களுக்கு இந்த தற்காலிக நிறுத்த வசதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE