மின் திருட்டு: தனியார் நிறுவனத்துக்கு ரூ.25 லட்சம் அபராதம்

மின் திருட்டு தொடர்பாக சென்னையில் தனியார் நிறுவனத்திடம் ரூ.25 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழக மின் வாரியத்தின் சென்னை பிரிவு பறக்கும் படையினர் தெற்கு வட்ட அதிகாரிகளுடன் இணைந்து கடந்த 10-ம் தேதி திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தெற்கு வட்டத்தில் ஒரு மின் நுகர்வோரின் நிறுவனத்தில் மின் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், நுகர்வோரிடம் இழப்பீடாக ரூ.22 லட்சத்து 66 ஆயிரத்து 512 வசூல் செய்யப்பட்டது. குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க, சமரசத் தொகையாக ரூ.2 லட்சத்து 45 ஆயிரமும் வசூலிக்கப்பட்டது.

பறக்கும் படை உதவி செயற்பொறியாளரை 94440 18955, 94458 50452, 94458 50453 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு மின் திருட்டு தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என்று மின் வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE