சென்னை
தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.23 ஆயிரத்து 480-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச அளவில் தங்கத்தின் விலை குறைவு மற்றும் பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங் களால் தங்கம் விலை நேற்று குறைந்தது.
சென்னையில் 22 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.23 ஆயிரத்து 480-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 935-க்கு விற்பனை ஆனது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரத்து 955-க்கு விற்கப்பட்டது.
விலை குறைவு ஏன்?
இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறுகையில், ‘‘அமெரிக்கா டாலரின் மதிப்பு குறைந்து, இந்தியாவில் ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது.
இதனால், சர்வதேச அளவில் தங்கத்தின் விலை குறைந்து, இந்தியாவிலும் விலை குறைந்துள்ளது. 50 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை ஒரு பவுனுக்கு ரூ.23 ஆயிரத்து 480-க்கு விற்கப்படுவதால், வழக்கத்தை விட மக்கள் கூட்டம் கணிசமாக அதிகரித்தது’’ என்றார்.