திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த புலிவாய் கூட்ரோடு (செய்யாறு செல்லும் சாலை) அருகே உள்ள தைல மரக் காட்டில் சனிக்கிழமை காலை பயங்கர வெடி சத்தம் கேட்டுள் ளது. இதனையடுத்து, அப்பகுதியை புகைமூட்டம் சூழ்ந் துள்ளது. மரம் மற்றும் செடிகள் கருகின. பொதுமக்கள் ஓடிச் சென்று பார்த்தபோது, 2 பேர் உடல் கருகி இறந்துகிடந்தனர்.
தகவல் அறிந்த வந்தவாசி போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர். வெடிச் சத்தம் கேட்ட இடத்தில் பிளாஸ் டிக் கேன்களும், சாலையோரத் தில் வந்தவாசி நகராட்சிக்கு சொந்தமான குப்பைகளை ஏற்றி செல்லும் லாரியும் இருந்துள்ளது.
இதையடுத்து, வந்தவாசி நகராட்சி அதிகாரிகளை போலீ ஸார் வரவழைத்தனர். அவர்கள், இறந்து கிடந்த 2 பேர் உடல்களை அடையாளம் காட்டினர். அதில், உடல் கருகி இறந்து கிடந்தவர் நகராட்சி டிரைவர் வெங்கடேசன், கை மற்றும் கால்கள் துண்டாகி இறந்து கிடந்தவர் துப்புரவுப் பணி யாளர் அர்ஜுனன் என்பது தெரிய வந்தது. இவர்கள் இரண்டு பேரும், வந்தவாசி - செய்யாறு சாலை யில் உள்ள எச்சூர்மேடு பகுதி யில் உள்ள குப்பைக் கிடங்கில் குப்பைகளை கொட்டிவிட்டு, திரும்பும் போது உயிரிழந்துள்ளது தெரியவந்தது.
தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று பிளாஸ்டிக் கேன் கள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, வெடிக்காமல் இருந்த இதர கேன்களுக்கு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினர். இறந்தவர்கள் உடல்களைக் கைப் பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு வந்தவாசி அரசு மருத்துவ மனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். எஸ்.பி., முத்தரசி, செய்யாறு கோட்டாட்சியர் சாந்தா மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். வேலூர் தடய அறிவியல் நிபுணர் அசோக் குமார் தலைமையிலான குழு, வரவழைக்கப்பட்டு பிளாஸ்டிக் கேன்கள் ஆய்வு செய்யப்பட்டன.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறும்போது, “குப்பை யைக் கொட்டிவிட்டு திரும்பும் போது, கேட்பாரற்று கிடந்த 6 பிளாஸ்டிக் கேன்கள் அருகே வெங்கடேசன், அர்ஜுனன் ஆகி யோர் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள், கேன்களை திறக்க முயன்று இருக்க வேண்டும் என்று கருதுகிறோம். அப்போதுதான், கேன்களில் இருந்த அழுத்ததால் வெடித்து சிதறியுள்ளது. அதில், அவர்கள் இருவரும் உயிரிழந் துள்ளனர். தடய அறிவியல் நிபுணர் குழு ஆய்வு செய்ததில், தொழிற் சாலைக்குப் பயன் படுத்தப்படும் கெமிக்கல் என்று தெரியவந்துள்ளது. நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந் ததால், அழுத்தம் ஏற்பட்டு வெடித் துள்ளது’’என்றனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.