கோஷ்டி பூசலால் இரு இடங்களில் தனித்தனியாக நடந்த அதிமுக ஆண்டு விழா

கோஷ்டிபூசலால் அதிமுக 47-வது ஆண்டு விழா புதுச்சேரியில் இரண்டு இடங்களில் நடந்தது.

தமிழக முதல்வர் பழனிசாமி அணி தரப்பு ஓரிடத்திலும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மற்றொரு இடத்திலும் இவ்விழாவை நடத்தின.

புதுச்சேரி அதிமுகவில் கோஷ்டி பூசல் காரணமாக தமிழக முதல்வர் எடப்பாடி தரப்பில் அதிமுக சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன் தலைமையில் ஒரு அணியும், துணை முதல்வர் ஓபிஎஸ் தரப்பில் முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அதிமுக கட்சியின் 47-வது ஆண்டு விழாவையொட்டி அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அன்பழகன் தலைமையில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாநிலச் செயலர் புருஷோத்தமன் கட்சி கொடியேற்றி வைத்து விழா நடைபெற்றது. பின்பு அதிமுக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதில் எம்எல்ஏக்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதே போல் ஓம்சக்தி சேகர் தலைமையிலான அணியினர் லெனின் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதிமுக ஆண்டு விழாவை தனியாக கொண்டாடினர்.

புதுச்சேரியிலும் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் அணியினர் தனித்தனியாக இவ்விழாவை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்