கலைஞர் கருணாநிதியின் அரசியல் பயணம்: ஒரு காலவரிசை

கலைஞர் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் திமுக தலைவர் மு.கருணாநிதி காலமானார். திராவிட இயக்கத்தின் தூண்களில் ஒருவர், சமூக நீதி காத்தவர், எந்தத் தேர்தலிலும் தோல்வி காணாத சாதனை படைத்தவர் கருணாநிதி.

கருணாநிதியின் வாழ்க்கைக் குறிப்பு: ஒரு காலவரிசைப் பார்வை

ஜூன் 3, 1924: திருக்குவளையில் பிறப்பு; தந்தை முத்துவேலர் நாதஸ்வரக் கலைஞர். கருணாநிதியும் நாதஸ்வரம் கற்க அனுப்பப்பட்டார், ஆனால் அந்தக் காலத்தில் நாதஸ்வரக் கலைஞர்கள் மேலாடை அணியக் கூடாது, இதனை எதிர்த்து நாதஸ்வரம் கற்பதை எதிர்த்த கருணாநிதி அரசியல் வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார்.

1938: நீதிக்கட்சியில் இணைந்தார். பிறகு திராவிடர் கழகமானது, இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டார்.

1942: மாணவர் நேசன் என்ற 8 பக்க கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினார். இதுதான் பின்பு முரசொலி ஆனது, பிற்பாடு தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் தொடங்கினார். இதுதான் திமுகவின் மாணவர் அமைப்பானது.

1944: ஜுபிடர் பிக்சர்ஸில் ஸ்க்ரீன் ரைட்டராகச் சேர்ந்தார்.

1947: இவர் வசனம் எழுதிய முதல் திரைப்படம் ராஜகுமாரி வெளியானது

1949: திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திமுக தொடங்கப்பட்ட போது அறிஞர் அண்ணாவுடன் இணைந்தார்.

1952: தமிழகத்தை உலுக்கிய சமூகப் படம் பராசக்தி வெளியானது. கருணாநிதி திரைக்கதை, வசனத்தில் வெளியான இந்தப் படம் திமுகவின் சமூக நீதிக் கொள்கைகளை சக்திவாய்ந்த முறையில் எடுத்துரைத்தது.

1953: டால்மியாபுரம் என்று மாற்றப்பட்ட பெயரை எதிர்த்து புகழ்பெற்ற கல்லக்குடி போராட்டத்தில் ஈடுபட்டார். ரயில்வே பாலத்தில் படுத்தது தமிழகத்தில் மறக்க முடியாத ஒரு பிம்பமானது. 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

1957: தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு முதன்முதலாக குளித்தலையிலிருந்து தேர்வு செய்யப்பட்டார். அன்று முதல் வெற்றி நாயகனாகவே இருந்தார், ஒரு தேர்தலில் கூட தோற்கவில்லை.

1961: திமுக பொருளாளார் ஆனார்.

1962: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவரானார்.

1967: திமுக முதன்முதலாக தமிழக அரியணை கண்ட போது முதல்வர் அண்ணாதுரையின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

1969: அண்ணாதுரை மறைவையடுத்து தமிழக முதல்வரானார்.

1972: கருத்து வேறுபாடு காரணமாக நண்பர் எம்.ஜி.ராமச்சந்திரன் அதிமுகவைத் தொடங்கினார்.

1976: இந்திரா காந்தி திமுக அரசை ஆட்சியிலிருந்து நீக்கினார்.

1977: அ.இ.அ.தி.மு.க பதவிக்கு வருகிறது, அப்போது முதல் 13 ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சியாக அமர்ந்தார்.

1989: எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது, கருணாநிதி மீண்டும் முதல்வரானார்.

ஜனவரி 1991: திமுக ஆட்சியை மத்திய அரசு கலைக்கிறது, விடுதலைப்புலிகளுக்கு மிகவும் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்பட்டது.

மே 1991: ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். திமுக-காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் அமோக வெற்றியை ஈட்டியது.

1996: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை அகற்றி மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார்.

2001: ஜெயலலிதா தலைமை அதிமுக அரசு கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்கிறது, கடும் எதிர்ப்புகளை அடுத்து விடுவிக்கப்பட்டார்.

2006: மீண்டும் தமிழக ஆட்சியை திமுக பிடிக்கிறது. முதல்வராக கலைஞர் கருணாநிதி 5-ம் முறையாகப் பதவியேற்றார்.

2009: தண்டுவட அறுவை சிகிச்சைக்குப் பிறகு சக்கர நாற்காலி வசமானார்.

2013, மார்ச்: தமிழீழப் பிரச்சினையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகினார்.

2014: மு.க.அழகிரியை கட்சியிலிருந்து நீக்கினார்.

2016: திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.ஆனார்.

2018 ஆகஸ்ட் 7 மறைவு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்