கண்டுகொள்ளாத நகராட்சி சாக்கடை அள்ளிய கவுன்சிலர்

சாக்கடையை அள்ளாத நகராட்சியை கண்டிக்கும் வகையில் கவுன்சிலரே சாக்கடை கழிவை அகற்றினார்.

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் நகராட்சியில் 12-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் உவைஸ். மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்தவர். இவரது வார்டுக்குட்பட்ட சாக்கடைகளில் சரிவர கழிவை அகற்றாமல், கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு கொசு உற்பத்தி அதிகமானது. இப்பிரச்சினையை 12-வது வார்டு பொதுமக்கள் உவைஸிடம் புகார் கூறினர். நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகளிடம் உவைஸ் பேசியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

செவ்வாய்க் கிழமை உவைஸ் நேரடி நடவடிக்கையில் இறங்கினார். அவரது வார்டுக்குட்பட்ட சந்தை ரோடு, தர்ஹா ரோடு பகுதிகளில் உள்ள வடிகாலில் சாக்கடை கழிவுநீரை மண்வெட்டியால் அப்புறப்படுத்தினார். அப்பகுதி இளைஞர்கள் அவருடன் இணைந்து அப்பணியில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்