திருச்சி சிவாவுக்கு திடீர் பதவி... திமுகவில் நேருவுக்கும் முக்கியத்துவம் குறைகிறதா?

By கரு.முத்து

வில்லங்கப் பேச்சால் அமைச்சர் பொன்முடியின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டு அவரிடமிருந்த துணைப் பொதுச்செயலாளர் பதவியை திருச்சி சிவாவிடம் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். மூத்த அமைச்​ச​ரான பொன்​முடி​யின் கட்சி பதவியை பறித்​தது மற்​றவர்​களுக்​கான எச்​சரிக்​கை. அந்த வகை​யில் ஸ்டா​லின் எடுத்​துள்ள இந்த நடவடிக்கை கட்​சிக்கு ஆரோக்​கிய​மான விஷ​யம் தான் என்​றாலும் பொன்​முடி​யின் துணைப் பொதுச்​செய​லா​ளர் பதவியை திருச்சி சிவாவுக்கு தந்​திருப்​பது பல்​வேறு ஊகங்​களைக் கிளப்பி விட்​டிருக்​கிறது.

இதன் மூலம் சில விஷ​யங்​களை திமுக தலைமை சொல்​லாமல் சொல்லி இருக்​கிறது என்​கி​றார்​கள் அரசி​யல் பார்​வை​யாளர்​கள். சிவாவை லைம்​லைட்​டுக்கு கொண்டு வந்​திருப்​ப​தன் மூலம் கட்​சி​யின் முதன்​மைச் செய​லா​ள​ரான அமைச்​சர் கே.என்​.நேரு​வுக்​கான முக்​கி​யத்​து​வம் குறைக்​கப்​பட்​டிருப்​ப​தாகச் அவர்​கள் சுட்​டிக்​காட்​டுகி​றார்​கள்.

திமுக மூத்த அமைச்​சர்​களின் ஒரு​வர் கே.என்.நேரு. இவரது மகன் அருண் நேரு பெரம்​பலூர் தொகுதி எம்​பி-​யாக இருக்​கி​றார். இந்த நிலை​யில், கடந்த 7-ம் தேதி தொடங்கி 3 நாட்​கள், அமைச்​சர் நேரு​வின் சகோ​தரர்​களான ரவிச்​சந்​திரன், மணிவண்​ணன், மற்​றும் அருண் நேரு ஆகி​யோரை குறி​வைத்து அமலாக்க துறை அதிரடி ரெய்​டு​களை நடத்​தி​யது.

இதன் முடி​வில், சட்​ட​விரோத பணப்​பரி​மாற்​றம் நடந்​திருப்​ப​தாக உறு​திப்​படுத்தி இருக்​கும் அமலாக்​கத்​துறை, இதில் அமைச்​சர் நேரு​வுக்​கும் அவரது மகன் அருண் நேரு​வுக்​கும் உள்ள தொடர்​பு​களை​யும் பட்​டியலிட்​டுள்​ளது. இதனிடையே, அமைச்​சரின் சகோ​தரர் ரவிச்​சந்​திரனை விசா​ரணைக்கு ஆஜராகும்​படி அமலாக்​கத்​துறை சம்​மன் அனுப்​பிய​தால் அவர் மருத்​து​வ​மனை​யில் அட்​மிட் ஆனார்.

நேருவை குறி​வைத்து அமலாக்​கத்​துறை இத்​தனை அதிரடிகளை எடுத்து வரும் நிலை​யில், இதுகுறித்து திமுக தலை​மையி​லிருந்து சம்​பிர​தாய​மாகக் கூட எவ்​வித கண்டன அறிக்​கை​யும் வெளி​யாக​வில்​லை. அமைச்​சர் செந்​தில் பாலாஜிக்கு எதி​ராக அமலாக்​கத்​துறை இத்​தகைய நடவடிக்​கையை மேற்​கொண்ட போது திமுக பொங்கி எழுந்து கடும் கண்​டனம் தெரி​வித்​தது. அவருக்கு ஜாமீன் மறுக்​கப்​பட்ட போதும் திமுக தலைமை பல்​வேறு சட்ட நடவடிக்​கை​களை எடுத்​தது.

ஆனால், அவரை விட சீனிய​ரான கே.என்​.நேருவை குறி​வைத்து அமலாக்​கத்​துறை காட்டி வரும் அதிரடிகளுக்கு திமுக தலைமை எவ்​வித கண்​டன​மும் தெரிவிக்​க​வில்​லை. நேரு​வுக்கு ஆதர​வாக திமுக-​வில் உள்ள சட்ட அமைச்​சர், அமைப்​புச் செய​லா​ளர் உள்​ளிட்​டோர் கூட வாய் திறக்​க​வில்​லை. நேருவை அமலாக்​கத்​துறை நடவடிக்கை விவ​காரத்​தில் இப்​படி ஒரேயடி​யாய் கைவிட்​டிருப்​பது அவரது ஆதர​வாளர்​களை கவலை​கொள்​ளச் செய்​துள்​ளது.

நேருவை கண்​டு​கொள்​ளாதது ஒரு​புறமிருக்க, திருச்சி அரசி​யலில் அவரோடு எதிரும் புதிரு​மாய் நிற்​கும் திருச்சி சிவா எம்​பி-யை துணை பொதுச்​செய​லா​ளர் பதவி​யில் இந்த நேரம் பார்த்து அமர்த்தி இருப்​பதும் நேரு விசு​வாசிகளை கொந்​தளிக்க வைத்​திருக்​கிறது. ஏற்​கெனவே ஒட்​டுமொத்த திருச்சி மாவட்​ட​மும் நேரு​வின் கட்​டுப்​பாட்​டில் இருந்​தது.

அதை மூன்​றாகப் பிரித்து உதயநி​தி​யின் நண்​ப​ரான அமைச்​சர் அன்​பில் மகேஸ் திருச்சி தெற்கு மாவட்​டச் செய​லா​ளர் ஆக்​கப்​பட்​டார். அத்​துடன் நேரு​வுக்கு இணை​யாக அன்​பில் மகேஸுக்​கும் அமைச்​சர் பதவி வழங்​கப்​பட்​டது. தற்​போது திருச்சி சிவாவுக்கு தலை​மைக் கழக பதவி வழங்​கப்​பட்​டிருப்​ப​தால் திமுக-வில் நேரு​வுக்​கான முக்​கி​யத்​து​வம் குறித்து கேள்வி எழுப்​பு​கி​றார்​கள்.

செந்​தில் பாலாஜிக்கு எதி​ராக அமலாக்​கத்​துறை நடவடிக்கை எடுத்த போதே, “யாரை​யும் நிம்​ம​தியா இருக்​க​விட​மாட்​டாங்க போல. பாலாஜி மாதிரி நம்​மாள எல்​லாம் ஜெயிலுக்​குப் போக​முடி​யாதுப்​பா” என்று தனது சகாக்​கள் மத்​தி​யில் ஜாலி​யாகப் பேசிய நேரு, மத்​திய அரசின் விசா​ரணை அமைப்​பு​கள் தன் பக்​கம் திரும்​பாமல் இருக்க ஒருசில தற்​காப்பு நடவடிக்​கை​களை​யும் மேற்​கொண்​ட​தாகச் சொல்​கி​றார்​கள்.

இது சம்​பந்​த​மாக சிலர் தலை​மை​யிடம் ஏடாகூட​மாகப் போட்​டுக் கொடுக்​கவே, அதுகுறித்து தலை​மைக்கு நேரு தன்​னிலை விளக்​க​மும் அளித்​த​தாகச் சொல்​கி​றார்​கள். நேரு விவ​காரத்​தில் தலைமை மவுனம் காப்​ப​தன் பின்​னணி​யோடு இந்த விவ​காரங்​களை​யும் இப்​போது முடிச்​சுப்​போட்​டுப் பேசுகி​றார்​கள்.

ஆனால் நேரு ஆதர​வாளர்​களோ, “எப்​போதும் தலை​மைக்கு விசு​வாச​மான​வ​ராக இருக்​கும் நேரு, நெருக்​கடிகளுக்கு அஞ்​சாதவர். எத்​தனை சோதனை​கள் வந்​தா​லும் அஞ்​சாமல் திமுக-வுக்​கும் தலை​வ​ருக்​கும் பக்​கபல​மாக நிற்​பார். திருச்சி மாவட்​டத்தை மூன்​றாகப் பிரித்​தா​லும் நேருவை முதன்​மைச் செய​லா​ள​ராக்கி அழகு பார்த்​தவர் ஸ்டா​லின்.

அமலாக்​கத்​துறை நடவடிக்​கை​கள் தொடர்​பாக நேரு​விடம் ஆறு​தலாக பேசிய ஸ்டா​லின், தொடர் நடவடிக்​கை​கள் தொடர்​பாக​வும் விசா​ரித்​த​படி தான் இருக்​கி​றார். இதையெல்​லாம் அறிக்​கை​யாக வெளி​யிட வேண்​டும் என்ற அவசி​யம் இல்​லை. நேருவை திமுக தலைமை என்​றைக்​கும் கைவி​டாது. அவருக்​கான முக்​கி​யத்​து​வ​மும் குறை​யாது” என்​கி​றார்​கள். எத்​தனை தடைகள் வந்​தா​லும் எடுத்த காரி​யத்தை முடித்​துக் காட்​டு​பவர் என்று பேர் வாங்​கியே பழக்​கப்​பட்ட நேரு​வுக்​கும் இது போறாத காலம் தான் போலிருக்​கிறது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்