​பாஜகவுடனான கூட்டணி அறிவிப்பால் அதிமுகவினர் மகிழ்ச்சி; எதிர்தரப்பு​கள் அதிர்ச்சி

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் அதி​முக தலை​மை​யில் பாஜக கூட்​டணி அறிவிக்​கப்​பட்ட நிலை​யில், அதி​முகவைச் சேர்ந்​தவர்​கள் மகிழ்ச்​சி​யடைந்​துள்​ளனர். அதே​நேரம் திமுக கூட்​டணி மற்​றும் தவெக தரப்பு அதிர்ச்​சி​யடைந்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது.

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலுக்கு இன்​னும் 9 மாதங்​களே உள்ள நிலை​யில், திமுக தனது கூட்​ட​ணியை அப்​படியே தக்க வைத்​து, தேர்​தலை சந்​திக்க ஆயத்​த​மாகி வரு​கிறது. அவ்​வப்​போது நடை​பெற்ற சில சம்​பவங்​கள், விசிக திமுக கூட்​ட​ணி​யில் இருந்து வில​கி​விடுமோ என்ற சந்​தேகத்தை ஏற்​படுத்​தி​யது. ஆனால், திமுக கூட்​ட​ணி​யில் தான் இருப்​போம் என்​பதை திரு​மாவளவன் தொடர்ந்து உறு​திப்​படுத்தி வரு​கிறார்.

ஆனால், அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, எந்த காலத்​தி​லும் பாஜக​வுடன் கூட்​டணி இல்லை என்றே தொடர்ந்து தெரி​வித்து வந்​தார். ஆனால், கடந்த மார்ச் 25-ம் தேதி காட்​சிகள் மாறின. அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி திடீரென மார்ச் 25ம் தேதி டெல்லி சென்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவை சந்​தித்​தார். தமிழக நலனுக்​காக சந்​தித்​த​தாக அவர் கூறி​னாலும், கூட்​டணி பேச்​சு​தான் என்​பதை பாஜக தரப்பு உறு​திப்​படுத்​தி​யது.

முன்​ன​தாக, சட்​டப்​பேர​வை​யில், நிதி​யமைச்​சர் தங்​கம் தென்​னரசு, பாஜகவை மனதில் வைத்து ‘தப்பு கணக்கு போட வேண்​டாம்’
என்று அதி​முகவை கேட்​டுக் கொண்​டார். அதற்கு அதி​முக கொறடா எஸ்​.பி. வேலுமணி எம்​ஜிஆர், ஜெயலலி​தாவை போல் சரி​யான கணக்​கைத் தான் பழனி​சாமி போடு​வார் என்று எதிர்​வினை​யாற்​றி​னார்.

அதே​போல், முதல்​வர் மு.க.ஸ்​டா​லினும் அதி​முக, பாஜக​வுடன் ரகசிய கூட்​டணி வைத்​திருப்​ப​தாக தொடர்ந்து தெரி​வித்து வந்​தார். அத்​துடன் சட்​டப்​பேர​வை​யில்,” தங்​கமணி கூட்​டணி கணக்​கில் ஏமாற​மாட்​டோம் என்று தெரி​வித்​திருந்​தார். நீங்​கள் ஏமாறாமல் இருந்​தால் வாழ்த்​துக்​கள்” என்று தெரி​வித்​தார்.இதுத​விர, வக்பு சட்​டத்​திருத்​தம், கச்​சத்​தீவு மீட்பு தொடர்​பாக தமிழக அரசின் தீர்​மானங்​களை அதி​முக ஆதரித்​தது. இதனால் அதி​முக, பாஜக பக்​கம் செல்ல வாய்ப்​பில்லை என்​பது போல் தோன்​றியது.

ஆனால், மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவின் சென்னை வரு​கை, அதி​முக குறித்த திமுக​வின் கணிப்பை மாற்​றி​விட்​டது. நேற்று முன்​தினம் சென்​னை​யில் மத்​திய அமைச்​சர் அமித் ஷா, ஆடிட்​டர் குரு​மூர்த்​தி​யுடன் ஆலோ​சனை நடத்​தி, அங்​கிருந்​த​படியே அதி​முக தரப்​பினரிடம் பேசி, மாலை​யில் கிண்​டி​யில் உள்ள ஓட்​டலில், அரு​கில் பழனி​சாமி உள்​ளிட்​டோரை வைத்​துக் கொண்​டே, அதி​முக தலை​மை​யில்​தான் கூட்​டணி என்று அறி​வித்​தார்.
அந்த நிகழ்​வில், பழனி​சாமி எது​வும் பேசா​விட்​டாலும், அவரது வீட்​டில் நடை​பெற்ற விருந்​தில் அமித் ஷா உள்​ளிட்​டோர் பங்​கேற்று 45 நிமிடங்​களுக்​கும் மேலாக பேசி​யது இந்த கூட்​டணிதான் தேர்​தலை சந்​திக்​கப் போகிறது என்​பதை உறு​திப்​படுத்​தி​யது.

அத்​துடன், ஓபிஎஸ், தினகரன் குறித்த கேள்விக்​கு, அதி​முக உட்​கட்சி விவ​காரத்​தில் பாஜக தலை​யி​டாது என்று கூறி, அதி​முக தலைமை சிக்​கி​யுள்ள நெருக்​கடிக்​கும் முற்​றுப்​புள்ளி வைத்​தார். அதி​முகவை பொறுத்​தவரை, கடந்த நாடாளு​மன்ற தேர்​தலின் போதே பாஜக​வுட​னான கூட்​டணி குறித்து பேசப்​பட்டு வந்​தது. ஆனால் கூட்​டணி அமைக்க பழனி​சாமி சம்​ம​திக்​க​வில்​லை. தனித்​தனி​யாக பாஜக​வும், அதி​முக​வும் கூட்​டணி அமைத்​த​தால், திமுக எளி​தாக தமிழகம், புதுச்​சேரி​யில் 40 தொகு​தி​களை​யும் கைப்​பற்​றியது.

ஆனால், தேர்​தல் முடிவை ஒப்பு நோக்​கும் போது, இரு கூட்​ட​ணி​யும் இணைந்​திருந்​தால் குறைந்த பட்​சம் 15 இடங்​கள் அதி​முக, பாஜக தரப்​புக்கு கிடைத்​திருக்​கும் என்​பது தெரிந்​தது.

வாக்கு சதவீதம் அதிகரிப்பு: நாடாளு​மன்ற தேர்​தல், சட்​டப்​பேரவை தேர்​தல் இடை​யில் பெரிய அளவில் தமிழகத்​தில் வாக்கு சதவீதம் வித்​தி​யாசப்பட வாய்ப்பு இல்லை என்​பதும், பாஜக​வுக்கு தற்​போது வாக்கு சதவீதம் அதி​கரித்​துள்​ளதை​யும் கருத்​தில் கொண்​டே, இருதரப்​பும் பேசி கூட்​ட​ணியை உறுதி செய்​த​தாக தெரி​கிறது.

இந்த கூட்​டணி அறி​விப்​பால், அதி​முக​வினர் மகிழ்ச்​சி​யடைந்​துள்​ளனர். குறிப்​பாக தமிழக பாஜக தலை​வ​ராக இருந்த அண்​ணா​மலை நீக்​கப்​பட்​டது, நயி​னார் நாகேந்​திரன் புதிய தலை​வ​ராக தேர்​வானது ஆகிய​வை​யும் அதி​முக​வினருக்கு மிகுந்த நம்​பிக்​கையை அளித்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது.

அதி​முக மற்​றும் பாஜக தரப்பு இந்த கூட்​ட​ணியை முழு​மை​யாக வரவேற்று அடுத்த கட்​ட​மாக கூட்​ட​ணி​யில் யாரை சேர்ப்​பது, எத்​தனை தொகு​தி​கள் என பேச தொடங்​கி​விட்ட நிலை​யில், திமுக கூட்​ட​ணியை அதிர்ச்​சி​யடைய செய்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது.

இதன் விளை​வாகவே நேற்று முன்​தினம் இரவே, பழனி​சாமி தமிழகத்​துக்கு துரோகம் செய்​து​விட்​ட​தாக கனி​மொழி எம்​.பி. விமர்​சித்​த​தாக​வும், நேற்று காலை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், தோல்விக் கூட்​டணி என்று தன் பங்​குக்கு சாடி​யுள்​ள​தாக​வும் கூறப்​படு​கிறது. ஆனால், இதற்கு தகுந்த பதிலை அதி​முக தரப்​பும் தெரி​வித்து வரு​கிறது. இதுத​விர, திமுககூட்​டணி கட்​சி​யினரும் அதி​முகவை விமர்​சித்து வரு​கின்​றனர். திமுக கூட்​டணி தவிர தவெக​வும் பாஜக​வுட​னான அதி​முக​வின் கூட்​ட​ணியை விமர்​சித்​துள்​ளது.இந்த நிலை​யில், அதி​முக தரப்​போ, திமுகவை வீழ்த்​து​வதே எங்​கள் இலக்​கு. அதற்​கான கூட்​ட​ணி​யில் இணைந்​துள்​ளோம் என்று ஒரே வரி​யில் விமர்​சனங்​களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்