டாஸ்மாக் சோதனையை எதிர்த்த வழக்கு: தமிழக அரசு மீது நீதிபதிகள் அதிருப்தி - வழக்கின் முழு பின்னணி!

By செய்திப்பிரிவு

சென்னை: ​டாஸ்​மாக் அலு​வல​கத்​தில் அமலாக்​கத்​துறை நடத்​திய சோதனையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்​கில், திடீரென உச்ச நீதி​மன்​றத்தை நாடியது ஏன் என்​றும், அதை முன்​கூட்​டியே தெரி​வித்து இருந்​தால் இந்த வழக்கை நாங்​கள் விசா​ரணைக்கு ஏற்று இருக்க மாட்​டோம் என்​றும், இது எங்​களை அவமானப்​படுத்​து​வது போல் உள்​ளது என்றும் நீதிப​தி​கள் அதிருப்தி தெரி​வித்​தனர்.

சென்​னை​யில் உள்ள டாஸ்​மாக் தலைமை அலு​வல​கத்​தில் கடந்த மார்ச் 6 முதல் 8-ம் தேதி வரை அமலாக்​கத்​ துறை அதி​காரி​கள் சோதனை மேற்​கொண்​டனர். இந்த சோதனை​யின் அடிப்​படை​யில் டாஸ்​மாக்​கில் ரூ.1000 கோடி அளவுக்கு முறை​கேடு​கள் நடந்​துள்​ள​தாக அமலாக்​கத்​ துறை அறிக்கை வெளி​யிட்​டது.

இந்​நிலை​யில், அமலாக்​கத்துறை​யின் சோதனை சட்​ட​விரோத​மானது என அறிவிக்​கக் கோரி​யும், அதி​காரி​களை விசா​ரணை என்ற பெயரில் துன்​புறுத்​தக்​கூ​டாது என கோரி​யும் தமிழக அரசு மற்​றும் டாஸ்​மாக் சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கு​கள் தொடரப்​பட்​டன.

இந்த வழக்கை முதலில் விசா​ரித்த நீதிப​தி​கள் எம்​.எஸ்​. ரமேஷ், என்​.செந்​தில்​கு​மார் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, மேல்​வி​சா​ரணைக்கு தடை விதித்து வழக்கு விசா​ரணை​யில் இருந்து வில​கினர். அதையடுத்து இந்த வழக்கு விசா​ரணை நீதிப​தி​கள் எஸ்​.எம்​. சுப்​ரமணி​யம், கே.​ராஜசேகர் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நடந்து வரு​கிறது.

அவமானப்படுத்தும் செயல்: இதனிடையே, இந்த வழக்கை சென்னை உயர் நீதி​மன்​றம் விசா​ரிக்​கக்​கூ​டாது என கோரி தமிழக அரசு சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. அதை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், இந்த வழக்கை சென்னை உயர் நீதி​மன்​றமே விசா​ரிக்​கட்​டும் என தெரி​வித்து தமிழக அரசின் கோரிக்​கையை ஏற்க மறுத்​தது. இந்​நிலை​யில், இந்த வழக்கு உயர் நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​ரமணி​யம், கே.​ராஜ சேகர் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது நீதிப​தி​கள், தமிழக அரசு தரப்பு வழக்​கறிஞரிடம், “இந்த வழக்​கில் திடீரென உச்ச நீதி​மன்​றத்தை நாடியது ஏன்? அதை முன்​கூட்​டியே தெரி​வித்து இருந்​தால் இந்த வழக்கை நாங்​கள் விசா​ரணைக்கு ஏற்று இருக்க மாட்​டோம். இது எங்​களை அவமானப்​படுத்​து​வது போல் உள்​ளது. இந்த வழக்கு அதி​காரி​களை காப்​பாற்​றும் நோக்​கில் தொடரப்​பட்​டுள்​ளதா அல்​லது பொது​மக்​கள் நலன் சார்ந்​த​தா” என அதிருப்தி தெரி​வித்து விசா​ரணையை பிற்​பகலுக்கு தள்ளி வைத்​தனர்.

பிற்​பகலில் வழக்கு மீண்​டும் விசா​ரணைக்கு வந்​த​போது டாஸ்​மாக் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் விக்​ரம் சவுத்​ரி, “டாஸ்​மாக்​கில் தவறு நடந்​துள்​ளது என்​பதை நம்​புவதற்​கான காரணங்​கள் இருந்​தால் மட்​டுமே நடவடிக்கை எடுக்க வேண்​டும். இந்த விவ​காரத்​தில் அது​போல எது​வும் இல்​லை, சோதனை என்ற பெயரில் அரசு அதி​காரி​களைத்​தான் துன்​புறுத்​தி​யுள்​ளனர். விதி​களை பின்​பற்​ற​வில்லை எனில் நீதி​மன்​றம் தலை​யிடலாம்” என வாதிட்​டார்.

அப்​போது, அமலாக்​கத்​ துறை தரப்​பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்​கறிஞர் என்​.ரமேஷ், “இந்த வழக்கை முதலில் விசா​ரித்த நீதிப​தி​கள், மேற்​கொண்டு நடவடிக்கை எடுக்க தடை விதித்து வாய்​மொழி​யாக உத்​தரவு பிறப்​பித்​தனர். அந்த உத்​தரவு தற்​போதும் தொடர்​கிற​தா” என்​றார். அதற்கு நீதிப​தி​கள், அது​போன்ற எந்த உத்​தர​வை​யும் இந்த அமர்வு பிறப்​பிக்​க​வில்லை என்​றும், எழுத்​துப்​பூர்​வ​மான உத்​தரவை மட்​டுமே நீதி​மன்​றம் பின்​பற்​றும் என்​றும் தெரி​வித்​தனர்.

அதற்கு எதிர்ப்பு தெரி​வித்த அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன், “மேற்​கொண்டு எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​ மாட்​டோம் என அமலாக்​கத்​ துறை ஏற்​கெனவே உறு​தி​யளித்​தது. அதன்​காரண​மாகவே அந்த அமர்​வு, வாய்​மொழி​யாக உத்​தரவு பிறப்​பித்​தது. தற்​போது அமலாக்​கத்​துறை தனது நிலைப்​பாட்டை மாற்​றக்​கூ​டாது” என்​றார்​. அதையடுத்​து நீதிப​தி​கள்​ இந்​த வழக்​கை இன்​றைக்​கு தள்​ளி வைத்​துள்​ளனர்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்