சென்னை எழும்பூர் பாந்தியன் சாலை ‘பார்’ ஆக மாறிய அவலம் - குவிந்து கிடக்கும் காலி மது பாட்டில்கள்!

By ம.மகாராஜன்

சென்னை: எழும்பூர் அரசு அருங்​காட்​சி​யகத்​துக்கு எதிரே நடை​பாதை​யில் அமைந்​துள்ள பிஎஸ்​என்​எல் தொலை​பேசி இணைப்பு பெட்​டிக்​குள்​ளும், நடை​பாதை​யிலும் சிதறி கிடக்​கும் மது​பாட்​டில்​களால் அப்​பகு​தி​யில் நடந்து செல்​லும் மக்​கள் கடும் அவதிக்கு ஆளாகி​யுள்​ளனர்.

சென்னை எழும்​பூர், பாந்​தி​யன் சாலை​யில் அமைந்​துள்ள அரசு அருங்​காட்​சி​யகத்​துக்கு தினந்​தோறும் ஏராள​மான பொது​மக்​கள் வந்து செல்​கின்​றனர். இதே வளாகத்​தில் கன்​னி​மாரா பொது நூல​க​மும், தேசிய கலைக்​கூட​மும் செயல்​பட்டு வரு​வ​தால் சுற்​றுலாப் பயணி​களு​டன் மாணவர்​களும், இளைஞர்​களும் அதி​கள​வில் வருகை தரு​கின்​றனர்.

அதே சாலை​யில் ஹோட்​டல்​கள், உணவு விடு​தி​கள், வணிக வளாகங்​கள், பூங்​கொத்து விற்​பனை செய்​யும் கடைகள், கிறிஸ்தவ திருச்​சபைகள், புத்தக கடைகள் போன்​றவை​யும் இயங்கி வரு​கின்​றன. இந்​நிலை​யில் பாந்​தி​யன் சாலை​யில் அரசு அரு​காட்​சி​யகத்​துக்கு எதிர்​புறம் ஒரு அரசு மது​பானக் கடை செயல்​பட்டு வரு​கிறது.

ஹோட்​டல்​களுக்கு மத்​தி​யில் இயங்​கும் மது​பானக் கடைக்கு நாளுக்கு நாள் கூட்​டம் அதி​க​மாக வரு​கிறது. ஆனால் கடை​யில் மது​வாங்கி செல்​லும் பெரும்​பாலான குடிமகன்​கள், கடைக்​கு எதிரே பாந்​தி​யன் சாலை​யில் அமைந்​துள்ள மேம்​பாலத்​தின் கீழ்​பகு​தி​யிலும், மதுக்​கடையை ஒட்​டி​யிருக்​கும் நடை​பாதைகளி​லும் அமர்ந்து குடிப்​பதை வாடிக்​கை​யாக வைத்​துள்​ளனர்.

அவ்​வாறு குடிக்​கும் மதுப்​பிரியர்​கள் குடித்த மது​ பாட்​டில்​களை மேம்​பாலத்​தின் அடி​யிலும், மதுக்​கடையை ஒட்​டி​யுள்ள நடை​பாதைகளி​லும் அப்​படியே போட்​டு​விட்​டுச் செல்கின்​றனர். குறிப்​பாக மதுக்​கடை அமைந்​திருக்​கும் அதே சாலை​யில் செயல்​பட்டு வரும் தனி​யார் தொழிற்​ப​யிற்சி நிலை​யம் (ஐடிஐ) மற்​றும் திருச்​சபை​யின் முன்பாக நடை​பாதை​யிலேயே குடித்​து​விட்டு ஏராள​மான பாட்​டில்​களை போட்​டு​விடு​கின்​றனர்.

ஐடிஐக்கு வரும் மாணவர்​களும், திருச்சபைக்கு வரும் பெண்​களும் நடை​பாதை​யில் குவிந்து கிடக்​கும் மதுப்​பாட்​டில்​களை கடந்து செல்​லும்​போது அவதிக்கு ஆளாகின்​றனர். சில நேரங்​களில் பாட்​டில்​களை உடைத்​தும் போடுகின்றனர். இதனால் வெறும் காலுடன் நடந்து செல்​வோரும் நாய், அணில் போன்ற ஜீவ​ராசிகளும் பாதிக்​கும் நிலை ஏற்​பட்​டுள்​ளது.

மேலும் சிலர் குடித்​து​விட்டு மது​பாட்​டில்​களை ஐடிஐக்கு முன்பு அமைந்​துள்ள மின் இணைப்பு பெட்​டி​யின் பின்​புறம் குவிய​லாக போட்​டு​விட்டு செல்​கின்​றனர். மேலும் சிலர் அங்கு அமைந்​துள்ள தொலை​பேசி இணைப்பு (பில்​லர்பாக்​ஸ்) பெட்​டிக்​குள் பாட்​டில்​களை போட்​டு​விட்​டுச் செல்​கின்​றனர். இதனால் மின் இணைப்பு பெட்​டி​யின் பின்​புறம் தினந்​தோறும் 20-க்​கும் அதி​க​மான மது​பாட்​டில்​களை காண​முடிகிறது.

இதுகுறித்து எழும்​பூரை சேர்ந்த சமூக ஆர்​வலர் சரவணன் கூறிய​தாவது: பாந்​தி​யன் சாலை​யில் அருங்​காட்​சி​யத்​துக்கு வரும் சுற்​றுலாப் பயணி​களும், பொது​மக்​களும் எதிர்​புறம் உள்ள ஹோட்​டல்​களுக்கு வந்து உணவருந்​துகின்​றனர். இந்​நிலை​யில் இவை​களுக்கு மத்​தி​யில் அமைந்​திருக்​கும் அரசு மதுபானக் கடை​யில் இருந்து மது வாங்​கிச் செல்​வோர் பாந்​தி​யன் மேம்​பாலத்​தின் கீழ் அமர்ந்​தும், அருகே உள்ள நடை​பாதை​யில் அமர்ந்​தும் மது குடிப்பது அதிகரித்து வரு​கிறது.

நடை​பாதை முழு​வதும் அவர்​கள் போட்டு செல்​லும் மது​பாட்​டில்​கள் சமூக சீர்​கேட்​டுக்கு வழி​வகுக்​கும். அதே​போல் அரு​கில் அமைந்​திருக்​கும் மின் இணைப்பு பெட்​டியை​யும், தொலைபேசி பில்​லர் பாக்​ஸை​யும் குடி​காரர்​கள் விட்​டு​வைக்​க​வில்​லை. பாட்​டில்​களை போடு​வதுடன் அவற்றை சேதப்​படுத்​து​வதுடன் ஆபத்​தை​யும் விளை​விப்​பார்​கள்.

பெண்​கள், குழந்​தைகள், மாணவர்​கள் என அனை​வருமே இதனால் பெரிதும் பாதிக்​கப்​படு​கின்​றனர். எனவே சம்​பந்​தப்​பட்ட துறை​யினர் நடவடிக்கை எடுத்து நடை​பாதைகளில் அமர்ந்து குடிப்​பதை தடுக்​க​வும், பாட்​டில்​களை ஆங்​காங்கே போடு​வதை தவிர்க்​க​வும் தகுந்த நடவடிக்​கை எடுக்க வேண்​டும். குறிப்​பாக மின் இணைப்பு பெட்​டி, தொலை​பேசி பில்​லர் பாக்​ஸ் ஆகிய​வற்றை முறை​யாக பராமரித்​து, மது​பாட்​டில்​களை அதில் போ​டாத​வாறு துறை​யினர்​ நடவடிக்​கை மேற்​கொள்​ள வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

43 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

22 hours ago

தமிழகம்

1 day ago

தமிழகம்

1 day ago

தமிழகம்

1 day ago

தமிழகம்

1 day ago

மேலும்