சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் 4 பிரதிநிதிகள் பதவிநீக்கம்: தமிழக அரசு நடவடிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: உசிலம்​பட்டி நகர்​மனறத் தலை​வர், சென்னை மாநக​ராட்சி கவுன்​சிலர்​கள் 2 பேர், தாம்​பரம் மாநக​ராட்சி கவுன்​சிலர் என 4 நகர்ப்​புற உள்​ளாட்சி அமைப்பு பிர​தி​நி​தி​களை பதவிநீக்​கம் செய்து அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழகத்​தில் நகர்ப்​புற உள்​ளாட்​சிகளான மாநக​ராட்​சிகள், நகராட்​சிகள், பேரூ​ராட்​சிகள் ஆகியவை 1998-ம் ஆண்டு தமிழ்​நாடு நகர்ப்​புற உள்​ளாட்சி அமைப்​பு​கள் சட்​டத்​தின் கீழ் நிர்​வகிக்​கப்​படு​கிறது. இதன் விதி​களை மீறும் மேயர்​கள், துணை மேயர்​கள், மன்​றத் தலை​வர்​கள், துணைத் தலை​வர்​கள், மண்​டலக்​குழு தலை​வர்​கள், மன்ற உறு​ப்பினர்​கள் மீது நடவடிக்கை மேற்​கொள்ள அச்​சட்​டம் அதி​காரம் அளிக்​கிறது. இதன்​படி விதி​களை மீறி செயல்​பட்ட நகர்ப்​புற உள்​ளாட்சி அமைப்பு பிர​தி​நி​தி​கள் 4 பேரின் பதவி​களை நீக்​கம் செய்து அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

அதன்​படி சென்னை மாநக​ராட்​சி​யில் 5-வது வார்டு கவுன்​சிலர் கே.பி.சொக்​கலிங்​கம் (தி​முக), 189-வது வார்டு கவுன்​சிலர் வ.பாபு (தி​முக), தாம்​பரம் மாநக​ராட்சி 40-வது வார்டு கவுன்​சிலர் மற்​றும் 3-வது மண்​டலக்​குழு தலை​வர் ச.ஜெயபிரதீப், உசிலம்​பட்டி நகராட்​சி, 11-வது வார்டு கவுன்​சிலர் மற்​றும் நகர்​மன்ற தலை​வர் க.சகுந்​தலா ஆகியோர் பதவிநீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளனர்.

பள்​ளிக்​கரணை பகு​தி​யில் 4800 வீடு​களுக்கு குடிநீர் இணைப்பு வழங்​கும் பணிக்கு இடையூறு செய்​த​தால் இது​வரை 180 இணைப்​பு​கள் மட்​டுமே கொடுக்​கப்​பட்​டுள்​ளன. இணைப்பு வழங்​கும் ஒப்​பந்​த​தா​ரர்​களை கவுன்​சிலர் பாபு மிரட்​டி, விரட்​டி​யுள்​ளார். பகுதி பொறி​யாளரை தாக்​கி​யுள்​ளார். குடிநீர் இணைப்பு சேவை இணை​யதள பாஸ்​வேர்டை கேட்​டும் மிரட்​டி​யுள்​ளார் என இவர் மீது குற்​றம்​சாட்​டப்​பட்​டது. அதனால் இவர் மீது நடவடிக்கை எடுக்க மாநக​ராட்சி ஆணை​யர் அரசிடம் கோரி​யிருந்​தார்.

சென்னை மாநக​ராட்சி 5-வது வார்டு கவுன்​சிலர் கே.பி.சொக்​கலிங்​கம் சாலை அமைக்​கும் பணியை தடுத்து நிறுத்​தி​யுள்​ளார். மாநக​ராட்சி சார்​பில் செயல்​படுத்​தப்​படும் உட்​கட்​டமைப்பு பணி​கள் மற்​றும் வளர்ச்சி பணி​களை மேற்​கொள்ள இடையூறாக இருந்​துள்​ளார் என குற்​றம்​சாட்​டப்​பட்​டது. அதனால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க மாநக​ராட்சி ஆணை​யர் அரசை கோரி​யிருந்​தார்.

உசிலம்​பட்டி நகரமன்ற தலை​வர்: உசிலம்​பட்டி நகரமன்ற தலை​வர் க.சகுந்​தலா, நகரமன்ற மாண்பை குறைக்​கும் வகை​யில், நகரமன்ற கூட்​டத்தை மன்ற கூடத்​தில் நடத்​தாமல், நகரமன்​றத் தலை​வர் அறை​யில் நடத்​தி​யுள்​ளார். அப்​போது மகன் மற்​றும் உறவினர்​கள் நகரமன்ற தலை​வர் அனு​ம​தி​யோடு கூட்ட அறை​யில் நின்று கொண்​டு, மன்ற உறுப்​பினர்​கள் கருத்து தெரிவிக்​கும்போது, அவர்​களு​டன் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டுள்​ளனர். விதி​களை மீறி திடக்​கழிவு மேலாண்மை தொடர்​பான தீர்​மானத்தை நிறைவேற்​றி​யுள்​ளார் என இவர் மீது குற்​றம்​சாட்​டப்​பட்​டது. அதனால் இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்​வாக இயக்​குநர் அரசிடம் கோரி​யிருந்​தார்.

தாம்​பரம் மாநக​ராட்​சியில்.. தாம்​பரம் மாநக​ராட்​சி, 3-வது மண்​டலக்​குழு தலை​வர் ச.ஜெயபிரதீப், மன்ற உறுப்​பினர்​களை கலந்​தாலோ​சிக்​காமல் தன்​னிச்​சை​யாக செயல்​படு​வது, 8 மாதங்​களாக தொடர்ச்​சி​யாக எந்த கூட்​டத்தையும் கூட்​டா​மல் இருப்​பது உள்​ளிட்ட பல்​வேறு குற்​ற​ச்சாட்​டு​கள் சுமத்​தப்​பட்​டது. அதனால் இவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்​வாக இயக்​குநர் அரசிடம் கோரி​யிருந்​தார். இந்த 4 பேரிடம் உரிய விளக்​கம் கோரப்​பட்​டது. அந்த விளக்​கங்​கள் திருப்தி அளிக்​காத நிலை​யில், இவர்​கள் மீதான குற்​றச்​சாட்டு உறுதி செய்​யப்​பட்​டதை தொடர்ந்​து, அரசு கவன​முடன்​ பரிசீலித்​து இவர்​களின்​ பதவி​களை நீக்​கி உத்​தரவிட்​டுள்​ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்