பொதுச் செயலாளர் பதவியிலிருந்து இபிஎஸ் தானாகவே விலகிக் கொள்வதே மரியாதை: ஓபிஎஸ் கருத்து

By செய்திப்பிரிவு

திருநெல்​வேலி / சென்னை: பழனி​சாமி தானாகவே அதி​முக பொதுச் செய​லா​ளர் பதவியி​லிருந்து வில​கிக் கொள்​வது​தான் அவருக்கு மரி​யாதை என்று முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் கூறி​னார்.

நெல்​லை​யில் நேற்று அதி​முக அமைப்​புச் செய​லா​ளர் கருப்​ப​சாமி பாண்​டியன் உடலுக்கு அஞ்​சலி செலுத்​திய ஓ.பன்​னீர்​செல்​வம், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “பிரிந்து கிடக்​கும் அதி​முக சக்​தி​கள் அனைத்​தை​யும் ஒருங்​கிணைக்க வேண்​டும் என்று கருப்​ப​சாமி பாண்​டியன் கரு​தி​னார். அதி​முக தொண்​டர்​களின் எண்​ண​மும் அது​தான். பிரிந்​திருக்​கும் அதி​முக ஒன்​றிணைவது அவசி​யம்” என்​றார்.

பின்​னர் நெல்​லை​யில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த ஓ.பன்​னீர்​செல்​வம், விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பழனி​சாமி தலை​மையி​லானவர்​கள் தவறான பொதுக்​குழுவை கூட்டி இருந்​த​தால், நாங்​கள் அதி​முக தலைமை அலு​வல​கத்​துக்​குச் செல்​லலாம் என்று முடிவு செய்​தோம். தலைமை அலு​வல​கத்​துக்​கும், இந்​தி​யன் வங்​கிக்​கும் இடை​யில், 8 மாவட்ட செய​லா​ளர்​கள் எங்​களை வழிமறித்​து, தொடர்ந்து செல்ல விடா​மல் தடுத்​தனர். நாங்​கள் வந்த வாக​னத்தை தாக்​கி, ரகளை செய்​தனர். இது​தான் நடந்த உண்​மை.

அவர்​கள் எங்​களைத் தாக்​கியதுடன், அவர்​களாகவே தலைமை அலு​வல​கத்​துக்​குள் புகுந்​து, அடி​யாட்​களை வைத்​து, பொருட்​களைச் சேதப்​படுத்​தினர். ஆனால், பழியை எங்​கள் மீது போட்​டனர். இவை அனைத்​தும் காவல் துறை​யின் வீடியோ பதி​வில் உள்​ளது.

கட்​சி​யில் நான் மட்​டும் இணைய வேண்​டும் என்று கூற​வில்​லை. பிரிந்து கிடக்​கும் அதி​முக சக்​தி​கள் அனைத்​தும் ஒன்​றாக இணைய வேண்​டும் என்​று​தான் தெரி​வித்​தேன். அவ்​வாறு இணைந்​தால்​தான், தேர்​தலில் வெற்றி பெற முடி​யும். இதை நான் திரும்​பத் திரும்ப கூறிவரு​கிறேன்.

ஆனால், அதி​முக எந்​தக் காலத்​தி​லும் வெற்றி பெறக்​கூ​டாது என்ற நோக்​குடன் பழனி​சாமி தரப்​பினர் செயல்​பட்டுக் கொண்​டிருக்​கின்​றனர். ஒற்​றைத் தலைமை வந்​தால் அனைத்து தேர்​தல்​களி​லும் வெற்றி பெறு​வேன் என்று பழனி​சாமி கூறி​னார். ஆனால், அவர் தலை​மைக்கு வந்த பின்​னர், ஒரு தேர்​தலில்​கூட வெற்றி பெற​வில்​லை. பழனி​சாமி அவராகவே பொதுச் செய​லா​ளர் பதவி​யில் இருந்து வில​கிக் கொள்​வது​தான் அவருக்கு மரி​யாதை. இல்​லை​யேல் அவர் அவமரி​யாதையை மட்​டுமே சந்​திப்​பார். இவ்​வாறு ஓ.பன்​னீர்​செல்​வம் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்