சென்னை: தமிழகம் முழுவதும் வரும் மார்ச் 29-ம் தேதி நியாயவிலைக் கடைகள் வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நியாயவிலைக் கடைகளில் பொதுவாக மாதத்தின் கடைசி பணி நாளில் ஒத்திசைவுப் பணிகள் நடைபெறுவதால், அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுவதில்லை.
இம்மாதத்தின் கடைசிப் பணி நாளான மார்ச் 29-ம் தேதி சனிக்கிழமையாக அமைகிறது. மேலும், அதனைத் தொடர்ந்து வரும் மார்ச் 30-ம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் மார்ச் 31-ம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் விடுமுறை நாட்களாகும்.
எனவே, இம்மாதத்தின் கடைசி 2 நாட்கள் நியாய விலைக் கடைகளுக்குப் பொது விடுமுறை தினங்களாக வருவதால், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி வரும் மார்ச் 29-ம் தேதி அன்று அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago