ரேஷன் கடைகள் மார்ச் 29-ம் தேதி வழக்கம்போல செயல்படும்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழுவதும் வரும் மார்ச் 29-ம் தேதி நியாயவிலைக் கடைகள் வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நியாயவிலைக் கடைகளில் பொதுவாக மாதத்தின் கடைசி பணி நாளில் ஒத்திசைவுப் பணிகள் நடைபெறுவதால், அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுவதில்லை.

இம்மாதத்தின் கடைசிப் பணி நாளான மார்ச் 29-ம் தேதி சனிக்கிழமையாக அமைகிறது. மேலும், அதனைத் தொடர்ந்து வரும் மார்ச் 30-ம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் மார்ச் 31-ம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் விடுமுறை நாட்களாகும்.

எனவே, இம்மாதத்தின் கடைசி 2 நாட்கள் நியாய விலைக் கடைகளுக்குப் பொது விடுமுறை தினங்களாக வருவதால், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி வரும் மார்ச் 29-ம் தேதி அன்று அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்