சென்னை: காரணமாக, அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், சென்னை உட்பட பல்வேறு இடங்களில் இருந்து வரும் 28-ம் தேதி முதல் 31 வரை போதிய அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, துாத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வரும் 28-ம் தேதி 460 சிறப்பு பேருந்துகளும், 29-ம் தேதி 530 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் 990 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதேபோல, வரும் 31-ம் தேதி சென்னைக்கும் இதர ஊர்களுக்கு 890 சிறப்பு பேருந்துகள்இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூருக்கு வரும் 28-ல் 100 சிறப்பு பேருந்துகளும், வரும் 29-ல் 95 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மாதவரத்தில் இருந்து வரும் 28 மற்றும் 29-ம் தேதிகளில் தலா 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். 31-ம் தேதி சொந்த ஊர்களில் இருந்து திரும்ப வசதியாக அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago