தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு குழு கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? - பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: மக்​களவை தொகுதி மறு​வரையறை தொடர்​பாக அமைக்​கப்​பட்​டுள்ள கூட்டு நடவடிக்கை குழு​வின் முதல் ஆலோ​சனை கூட்​டம் சென்​னை​யில் முதல்​வர் ஸ்டா​லின் தலை​மை​யில் கடந்த 22-ம் தேதி நடந்​தது. இதில், கேரளா, தெலங்​கா​னா, பஞ்​சாப் முதல்​வர்​கள், கர்​நாடகா துணை முதல்​வர் உட்பட மொத்​தம் 6 மாநிலங்​களில் இருந்து 14 அரசி​யல் கட்​சிகளின் பிர​தி​நி​தி​கள் பங்கேற்​றனர்.

இந்த கூட்​டத்​தில் ஆந்​திர மாநில துணை முதல்​வர் பவன் கல்​யாணின் ஜனசேனா கட்​சி​யும் கலந்து கொண்​ட​தாக கூறப்​பட்ட நிலையில், அதற்கு அந்த கட்சி மறுப்பு தெரி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக ஜனசேனா கட்சி தலை​வரின் அரசி​யல் செயலர் பி.ஹரிபிர​சாத் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தொகுதி மறு​வரையறைக்கு எதி​ராக சென்​னை​யில் திமுக நடத்​திய அனைத்து கட்சி கூட்​டத்​தில் பங்​கேற்​கு​மாறு ஜனசேனா கட்​சிக்கு அழைப்பு வந்​தது. இந்த கூட்​டத்​தில் பங்​கேற்க வேண்​டும் என்று திமுக சார்​பில் பிர​தி​நி​தி​கள் நேரில் வந்து அழைப்பு விடுத்​தனர்.

எனினும், வெவ்​வேறு கூட்​ட​ணி​களாக இருப்​ப​தால், இந்த கூட்​டத்​தில் பங்​கேற்க இயல​வில்லை என கண்​ணி​யத்​துடன் தெரிவிக்க வேண்​டும் என எங்​கள் கட்சி தலை​வர் பவன் கல்​யாண் வழி​காட்​டி​னார். அதன்​படியே, இக்​கூட்​டத்​தில் கலந்​து​கொள்ள முடி​யாது என்று தெரி​வித்​து​விட்​டோம்.

இக்​கூட்​டத்​தில் ஜனசேனா கலந்து கொண்​ட​தாக வெளி​யான செய்​தி​கள் வெறும் ஊகங்​களே. தொகுதி மறு​வரையறை​யில் அவர்களுக்கு கருத்​துகள் இருப்​பது​போல​வே, எங்​களுக்கு கொள்கை உள்​ளது. இந்த விஷ​யத்​தில் எங்​கள் கொள்​கையை அதி​காரப்​பூர்​வ​மான மேடை​யில் வெளிப்​படுத்​து​வோம். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்