சென்னை: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கோ-ஆப்டெக்ஸ் புதிய விற்பனை நிலையத்தை திறக்கவிருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, பிற மாநிலங்களில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் அமைக்கப்படுமா என்று பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ இ.கருணாநிதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் ஆர்.காந்தி பதில் அளித்து பேசியதாவது: இந்தியா முழுவதும் 150 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 106 விற்பனை நிலையங்களும், பிற மாநிலங்களில் 44 நிலையங்களும் செயல்படுகின்றன. ஆந்திராவில் 8, தெலங்கானா, கர்நாடகா, டெல்லி, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 3 நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
தெலங்கானா, ஆந்திராவில் விற்பனை நிலையம் புதிப்பிக்கப்பட்டு திறப்பட்டுள்ளது. ஆந்திராவில் நடைபெற்ற திறப்பு விழாவில் பாஜக அமைச்சர் பங்கேற்று, கோ-ஆப்டெக்ஸில் பொருட்கள் தரமாக உள்ளதாக பாராட்டினார்.
» பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைகிறது
» 15 மாவட்டங்களில் 21 இடங்களில் ரூ.375 கோடியில் தடுப்பணை: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் புதிதாக விற்பனை நிலையம் தொடங்கப்படவுள்ளது. அதற்காக ரூ.44 லட்சத்தில் 900 சதுர அடி பரப்பளவில் விற்பனை நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago