மதுபான ஆலை ஊழலால் புதுச்சேரியிலும் பிரளயம்! - ‘கமுக்க’ ரங்கசாமி... ‘கலகக் குரல்’ நாராயணசாமி!

By அ.முன்னடியான்

தமிழகத்தில் டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக பாஜக-வினர் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், புதுச்சேரியில் புதிதாக மதுபான ஆலைகளுக்கு அனுமதியளித்ததில் மெகா ஊழல் நடந்திருப்பதாக என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக கர்ஜித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். புதுச்​சேரியில் புதிதாக 6 மதுபான தொழிற்சாலைகள் தொடங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்த போதே, திமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்​பியது.

ஆட்சியில் அங்கம் வகிக்கும் பாஜக எம்எல்​ஏ-க்​களும் பாஜக ஆதரவு சுயேச்​சைகளும் இதை எதிர்த்தன. புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி​யளித்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என துணை நிலை ஆளுநரை சந்தித்து மனு கொடுத்தது காங்கிரஸ்.

இத்தனை பரபரப்பாக பேசப்பட்ட இந்த விவகாரத்தில் திடீரென அனைத்துக் கட்சிகளும் கப்சிப் ஆகின. கடந்த 13-ம் தேதி பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசிய முதல்வர் ரங்கசாமி, “6 புதிய மதுபான பாட்டிலிங் தொழிற்​சாலைகள் அமைக்க அனுமதி​யளித்​திருப்பதன் மூலம் அரசுக்கு ரூ.500 கோடி வரைக்கும் வருமானம் கிடைக்கும்.

5 ஆயிரம் பெண்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்​கும்” என்றார். இதைக் கேட்டுக்​கொண்டு பேரவையில் அத்தனை எம்எல்​ஏ-க்​களும் அமைதி​யாகவே அமர்ந்​திருந்​தனர். இந்த நிலையில், புதிய மதுபான ஆலைகளுக்கு ரூ.15 கோடி லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதி​யளிக்​கப்​பட்​டுள்ளது. எனவே, இந்த விஷயத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்” என முன்னாள் முதல்வர் நாராயணசாமி போர்க்கொடி தூக்கி இருக்​கி​றார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர், “புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி​யளித்த விவகாரத்தில் வெளிப்​படைத் தன்மை இல்லாமல் ஒரு சிலருக்கு சாதகமாக விதிமுறைகளை வகுத்​திருக்​கி​றார்கள். இந்த ஆலைகளை அமைப்பது தொடர்பாக பொதுமக்​களிடம் கருத்துக் கேட்க​வில்லை.

புதுச்​சேரியில் ஏற்கெனவே கடல் நீர் உட்பு​குந்து விட்டது. இந்த நிலையில், புதிய மதுபான ஆலைகளால் பெருமளவில் நிலத்தடி நீர் உறிஞ்​சப்​படும். ஆலைகளின் கழிவு நீரால் சுற்றுச் சூழலும் பாதிக்​கப்​படும். நிலத்தடி நீரை உறிஞ்சும் ஆலைகளை அமைக்க அனுமதிப்​ப​தில்லை என்ற அரசின் முந்தைய உத்தரவை அப்பட்டமாக மீறி இருக்​கி​றார்கள்.

ஆக, மதுபான ஆலை அதிபர்​களிடம் கையூட்டு பெறுவதற்​காகவே முதல்வர் ரங்கசாமி​யும், அமைச்​சர்​களும் புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி அளித்​திருக்​கி​றார்கள். ஒரு ஆலைக்கு ரூ.10 கோடி வரைக்கும் கைமாறி இருப்பதாக பாஜக எம்எல்​ஏ-வான கல்யாணசுந்தரமே சொல்லி இருக்​கி​றார். அதனால் தான் துணை நிலை ஆளுநரைச் சந்தித்து, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி மனு அளித்​தோம். ஆனால், இதுவரை ஆளுநரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

புதிய மதுபான ஆலைகளால் அரசுக்கு வருமானம் கிடைக்கும் என்கிறார் முதல்வர். ஆனால், ஏற்கெனவே புதுச்​சேரியில் உள்ள 8 மதுபான ஆலைகளிலும் அதிகபட்சமே 40 சதவீத அளவுக்​குத்தான் உற்பத்தி நடக்கிறது. இந்த நிலையில், புதிதாக எதற்காக 6 ஆலைகளை தொடங்க வேண்டும்? ஒரு ஆலைக்கு 100 பேருக்கு வேலை கொடுத்​தால்கூட மொத்தமே 600 பேருக்​குத்தான் வேலைவாய்ப்புக் கிடைக்​கும். ஆனால், 5 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்கிறார் முதல்வர்.

உண்மை​யாகவே அரசுக்கு வருவாய் கிடைக்க வேண்டு​மானால் மதுக்​கடைகள், மதுபான ஆலைகளை அரசே எடுத்து நடத்த வேண்டும். இந்த விவகாரத்தை நாங்கள் அத்தனை எளிதில் விடப்​போவ​தில்லை. நீதிமன்றம் வரைக்கும் சென்றாவது புதிய மதுபான ஆலைகள் வருவதை தடுத்தே தீருவோம்” என்​றார்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்