திருப்பூரை உடைக்க திட்டமிடுகிறாரா சக்கரபாணி? - பழநி மாவட்ட பிரிப்பு சர்ச்சைகள்!

By இரா.கார்த்திகேயன்

“திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநியை தலைநகராகக் கொண்டு தனி மாவட்டம் வரப்போகிறது” என்று வட்டமடிக்கும் செய்திகளால் திருப்பூர் மாவட்ட அரசியல்வாதிகள் மட்டுமல்லாது மக்களும் கலக்கமடைந்து கிடக்கிறார்கள். ​முதல்வர் மு.க.ஸ்​டா​லினின் மனைவி துர்கா ஸ்டாலின் பழநி முருகனின் தீவிர பக்தர்.

அடிக்கடி ஆர்ப்​பாட்​ட​மில்​லாமல் பழநிக்கு வந்து முருகனை வழிபட்டுச் செல்வார். அப்போதெல்லாம் அவரது வருகை குறித்தான ஏற்பாடுகளை முன்னின்று செய்பவர் அமைச்சர் அர.சக்​கரபாணி தான். இதை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு துர்கா ஸ்டாலின் மூலமாகவே பழநி தனி மாவட்ட கோரிக்கையை வென்றெடுக்க சக்கரபாணி காய்நகர்த்​துவதாக உடன்பிறப்​புகள் காதைக்​கடிக்​கி​றார்கள்.

பொள்ளாச்சியை தலைநக​ராகக் கொண்டு மடத்துக்​குளம், உடுமலைப்​பேட்டை, வால்பாறை, பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய தனி மாவட்டம் உருவாக்​கப்​படும் என அதிமுக தனது தேர்தல் அறிக்​கையில் சொன்னது. அதேபோல், பழநியை தலைமை​யிட​மாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்​கப்​படும் என திமுக-வும் தேர்தல் வாக்குறுதி கொடுத்தது. அதன்படி, பழநி, மடத்துக்​குளம், உடுமலைப்​பேட்டை, ஒட்டன்​சத்​திரம் தொகுதிகளை உள்ளடக்கி பழநியை தலைநக​ராகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க அமைச்சர் சக்கரபாணி மெனக்​கிடு​வ​தாகச் சொல்கி​றார்கள்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய திருப்பூர் மாவட்ட திமுக சீனியர்கள் சிலர், “திண்​டுக்கல் மாவட்ட திமுக-வில் மூத்த அமைச்சரான ஐ.பெரிய​சாமி​யும், அவரது மகன் செந்தில்​கு​மாரும் அசைக்​க​முடியாக சக்தியாக இருக்​கி​றார்கள். ஐபி-யை மீறி அங்கு சக்கர​பாணியால் பெரிதாக எதையும் செய்து​விட​முடி​யாது. அதனால், பழநியை தலைமை​யிட​மாகக் கொண்டு தனி மாவட்​டத்தை உருவாக்​கினால் மாவட்ட அமைச்சராக தான் மட்டுமே அதிகாரத்​துடன் வலம்வரலாம் என நினைக்​கிறார் சக்கர​பாணி.

உள்ளுக்குள் இப்படியொரு திட்டம் இருப்பது கூட தவறில்லை. ஆனால், கொங்கு மண்டலத்தில் வரும் மடத்துக்​குளத்​தை​யும், உடுமலை​யையும் தென்மாவட்ட வாழ்வியல் சாயலைக் கொண்ட பழநி, ஒட்டன்​சத்​திரம் தொகுதி​களையும் உள்ளடக்கி புதிய மாவட்​டத்தை உருவாக்​குவது சிக்கலை உண்டாக்​கும்.

மக்களவைத் தேர்தலில் தனது விசுவாசியான ஈஸ்வர​சாமியை பொள்ளாச்சி தொகுதியில் நிற்க​வைத்து அவரை ஜெயிக்​கவும் வைத்தவர் சக்கர​பாணி. அதேபோல் 2026-ல், தற்போது அதிமுக வசம் உள்ள மடத்துக்​குளம், உடுமலை தொகுதிகளை திமுக-வுக்கு வசமாக்கிக் காட்டு​கிறேன் என்று தலைமையில் சொல்லித்தான் பழநி மாவட்டப் பிரிப்​புக்கு சக்கரபாணி அடிபோட்டதாக சொல்கி​றார்கள்.

பழநி மாவட்​டத்தில் திருப்பூர் மாவட்​டத்தின் இரண்டு தொகுதிகள் சேர்க்​கப்​படலாம் என்ற செய்தியை திருப்பூர் மாவட்ட திமுக செயலா​ளர்​களும் அமைச்சர் மு.பெ.​சாமி​நாதனும் அவ்வளவாய் ரசிக்​க​வில்லை என்கி​றார்கள். தங்களுக்கான ஆளுகை எல்லை குறைந்து போகும் என்பது இவர்களது கவலை.

அதேபோல், அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பிலும் இந்த பிரிவினையை விரும்​ப​வில்லை என்கி​றார்கள். ஆனால், மடத்துக்​குளம், உடுமலை தொகுதி​களில் உள்ள சக்கர​பாணியின் ஆதரவாளர்கள் எம்எல்ஏ, எம்பி, மாவட்டச் செயலாளர் கனவில் புதிய மாவட்​டத்தை வரவேற்றுக் கொண்டிருக்​கி​றார்கள்” என்றனர்.

இதுகுறித்து அமைச்சர் சக்கர​பாணி​யிடம் பேசினோம். “பழநியை தலைநக​ராகக் கொண்டு தனி மாவட்டம் அமைப்பது என்பது முதல்​வரின் முடிவு. அது அரசின் கொள்கை முடிவாக இருக்​கலாம். புதிய மாவட்டம் அறிவிப்பு இந்த சட்டப்​பேரவை கூட்டத் தொடரில் வெளியாகுமா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கு என்னை பொறுப்​பாளராக முதல்வர் நியமித்​தார்.

அதனால் ஈஸ்வர​சாமியை வெற்றி பெற வைத்தோம். மாவட்ட பிரிவினை தொடர்பாக நான் எந்த முனைப்பும் காட்ட​வில்லை. பலரும் பல விதமான யூகங்​களைச் சொல்வார்கள். அதற்கெல்லாம் நான் பதில் சொன்னால் தவறாகி விடும்” என்றார். இதனிடையே, பொள்ளாச்சியை தலைநகராக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என முதல்​வ​ருக்கு கடிதம் அளித்​திருக்​கி​றார் பொள்​ளாச்சி தொகுதி எம்​எல்​ஏ-வான அதிமுக முன்​னாள் அமைச்சர்​ பொள்​ளாச்சி ஜெய​ராமன்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்