முத்துசாமிக்கு முக்கியத்துவம் குறைகிறதா? - ஈரோடு திமுகவில் ‘இடப்பெயர்ச்சி’ அரசியல்!

By எஸ்.கோவிந்தராஜ்

திமுக-வில் மாவட்ட வாரியாக உதயநிதி ஆதரவாளர்களின் கை மெல்ல மெல்ல ஓங்கி வருவதால் சீனியர்கள் எல்லாம் ஜெர்க் ஆகி வருகிறார்கள். அந்த வகையில், ஈரோடு மாவட்ட திமுக-வின் அதிகார மையாக இருந்து வரும் அமைச்சர் முத்துசாமியின் ஆதரவாளர்களையும் இந்த அச்சம் சூழ்ந்துள்ளது.

ஈரோடு முத்து​சாமிக்கு 2011, 2016 சட்டமன்றத் தேர்தல்​களில் போட்டியிட திமுக வாய்ப்​பளித்தது. இருமுறையும் தோற்றுப்போன முத்து​சாமி, 2021 தேர்தலில், விட்ட இடத்தைப் பிடித்து அமைச்​சர​வை​யிலும் அங்கமா​னார். அதன் பிறகு திமுக-வில் முத்து​சாமிக்கு தரப்பட்ட முக்கி​யத்து​வ​மானது பலரது கண்களை உறுத்​தியது.

அதேசமயம், தனக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, தனக்கு யாரெல்லாம் சவாலாக இருப்​பார்களோ அவர்களை எல்லாம் முத்துசாமி மெல்ல ஓரங்கட்​டிய​தாகச் சொல்வார்கள். ஒன்றுபட்ட ஈரோடு மாவட்ட திமுக செயலாளராக இருந்த என்.கே.கே.பி.​ராஜவின் பதவி பறிக்​கப்​பட்டு, ஈரோடு வடக்கு, தெற்கு என மாவட்ட திமுக இரண்டாக பிரிக்​கப்​பட்டது. தெற்கு மாவட்​டத்​துக்கு செயலாளர் ஆனார் முத்து​சாமி.

முத்து​சாமிக்கு போட்டியாக இருந்த சுப்பு​லட்சுமி ஜெகதீசன் 2021-ல் அறிமுகமே இல்லாத பாஜக வேட்பாளர் சரஸ்வ​தி​யிடம் சொற்ப ஓட்டில் தோற்றதும் இயல்பாக நடந்தது இல்லை என்பார்கள். அந்தத் தேர்தலில் மாவட்​டத்தில் 2 இடங்களில் மட்டுமே திமுக வென்ற​தால், போட்டி​யின்றி அமைச்​சரு​மானார் முத்து​சாமி. மக்களவைத் தேர்தலிலும் ஈரோடு தொகுதியை கூட்ட​ணிக்கு தள்ளிவிட ஒரு முயற்சி நடந்தது.

ஆனால் சுதாரித்துக் கொண்ட திமுக தலைமை, தொகுதியை திமுக-வுக்கு ஒதுக்கி இளைஞரணி துணை அமைப்​பாளரான பிரகாஷை எம்.பி ஆக்கியது கடந்த 10 ஆண்டுகளாக ஈரோடு திமுக-வில் தனிக்​காட்டு ராஜாவாக கோலோச்சிய முத்து​சாமிக்கு, பிரகாஷின் வரவு அத்தனை விருப்​ப​மானதாக இல்லை. அதேசமயம் உதயநி​தியின் நேரடி தேர்வு, அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்​ட​வர்​களின் அன்புக்​குரியவர் என்பதால் பிரகாஷ் பிரகாசிக்க ஆரம்பித்​துள்ளார்.

ஈவிகேஎஸ் மறைவுக்குப் பின், ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசிடம் கேட்டுப்​பெற்ற திமுக தலைமை, தேமுதிக வரவான வி.சி.சந்​திரகுமாரை வேட்பாள​ராக்கி வெற்றி பெற வைத்துள்ளது. தொண்டர்​களிடம் நெருக்கம் பாராட்டுபவர் என்பதால் சந்திரகு​மாரின் ‘என்ட்ரி’ முத்து​சாமிக்கு சங்கடத்தை உண்டாக்​கலாம் என்கின்றனர் உடன்பிறப்புகள். அதேசமயம்

முத்து​சாமியின் அரவணைப்பில் வளர்வதையே சந்திரகுமார் விரும்​புவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்​றனர். இந்த நிலையில், முத்து​சாமியின் தெற்கு மாவட்​டத்தில் இருந்து பெருந்துறை தொகுதி​யை​யும், வடக்கு மாவட்​டத்தில் இருந்து பவானி தொகுதி​யையும் பிரித்து ஈரோடு மத்திய மாவட்​டத்தை உருவாக்கி​யுள்ள திமுக தலைமை, அதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்க​டாசலத்தைச் செயலாளராக அறிவித்​துள்ளது.

ஏற்கெனவே, செங்கோட்​டையனை எதிர்த்து அரசியல் செய்த தோப்பு வெங்க​டாசலத்தின் வரவும், முத்து​சாமிக்கு வைக்கப்பட்ட ‘செக்’ என்றே பார்க்​கப்​படு​கிறது. இந்த நிலையில், ஒதுங்கி இருந்த முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா மீண்டும் ‘ஆக்டீவ்’ அரசியலுக்கு வருகிறார், அந்தியூர் தொகுதியில் போட்டியிட தயாராகிறார் என்ற தகவலும் ஈரோடு திமுக வட்டாரத்தை தற்போது பரபரப்​பாக்கி உள்ளது.

இதுகுறித்து முத்து​சாமியின் ஆதரவாளர்​களிடம் பேசிய​போது, “எடுத்தேன் கவிழ்த்தேன் என எதையும் அமைச்சர் செய்ய​மாட்டார். எதையுமே விதிகளுக்கு உட்பட்டே செய்ய வேண்டும் என்று நினைப்​பவர். இது கட்சி​யினர் சிலருக்கு பிடிப்​ப​தில்லை. அதனால் ஏதேதோ கட்டுக்​கதைகளை அள்ளி​விடு​கிறார்கள். ஆனால், அமைச்​சரின் அரசியல் அனுபவத்தை​யும், செயல்​பாடு​களையும் தலைவர் நான்கு உணர்ந்​திருக்​கிறார். அதனால் இந்த சலசலப்பு​களால் சலனப்​ப​டாமல் இருக்​கிறார் அமைச்சர்” என்றனர். முற்பகல் செய்யின் பிற்​பகல் விளையும் என்பது அரசியலுக்கு மட்​டும் பொருந்​தாதா என்​ன!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்