ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு: ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டில் நேற்று தொடங்கி வைத்தார். மேலும் பணிகள் முடிவுற்ற அரசுத் துறை கட்​டிடங்​களை​யும் திறந்து வைத்​தார்.

செங்​கல்​பட்டு மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் அலு​வல​கம் அரு​கில் நேற்று நடை​பெற்ற அரசு நிகழ்ச்​சி​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பங்​கேற்​றார். அதில், ரூ.280.38 கோடி மதிப்​பில் 47 முடிவுற்ற கட்​டிடங்​கள் மற்​றும் நலத்​திட்​ட பணி​களை திறந்து வைத்​தார். தொடர்ந்​து, நகராட்சி நிர்​வாகத் துறை சார்​பில், செங்​கல்​பட்டு மற்​றும் மறைமலைநகர் நகராட்​சி பகு​தி​களில் ரூ.497.06 கோடி மதிப்​பிலான 5 புதிய திட்​ட பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார். அதோடு, ரூ.508 கோடி மதிப்​பிலான அரசு நலத்​திட்ட உதவி​களை வழங்​கி​னார்.

மேலும், நகர்ப்​புற பகு​தி​களில் பட்​டாக்​கள் வழங்​கும் திட்​டத்​தின் கீழ், சென்​னை, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம் மற்​றும் செங்​கல்​பட்டு ஆகிய மாவட்​டங்​களில் உள்ள பெல்ட் ஏரியா மக்​களுக்கு வீட்​டுமனை பட்டா வழங்​கும் வகை​யில், முதற்​கட்​ட​மாக செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் ஆட்​சேபகரமற்ற அரசு புறம்​போக்கு நிலங்​களில் நீண்ட கால​மாக வீடு கட்டி குடி​யிருக்​கும் 214 நபர்​களுக்கு நிலங்​களை வரன்​முறைப்​படுத்தி பட்டா வழங்​கும் திட்​டத்தை முதல்​வர் ஸ்டா​லின் தொடங்கி வைத்​தார்.

​விழா​வில் முதல்​வர் பேசி​ய​தாவது: கடந்த மாதம் நடை​பெற்ற அமைச்​சர​வைக் கூட்​டத்​தில் எடுக்​கப்​பட்ட முடி​வின்​படி, நீண்​ட​கால​மாக, நகர்ப்​புற பகு​தி​யில் வீடு கட்டி குடி​யிருந்து வருபவர்​களுக்கு பட்டா வழங்​கும் திட்​டத்தை தொடங்கி வைத்​துள்​ளேன். தமிழகம் முழு​வதும் இந்த திட்​டத்​தால் பல ஆயிரம் குடும்​பங்​கள் பயனடை​யும்.

தொழில் வளர்ச்​சியை மேலும் ஊக்​குவிக்​கும் வகை​யில், செய்​யூரில் சுமார் 800 ஏக்​கர் பரப்​பள​வில் புதிய சிப்​காட் தொழில் பூங்கா அமைக்​கப்​படும். கடந்த 3 ஆண்​டு​களில் ரூ.10 லட்​சம் கோடிக்​கும் அதி​க​மாக, தனி​யார் முதலீட்​டு திட்​டங்​கள் தமிழகத்​துக்கு வரு​வது உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது என்​றால், அதற்கு காரணம், நம்​முடைய ஆட்​சி​யின் மீதான நம்​பிக்​கை.

மும்​மொழிக் கொள்​கை​யை, அதாவது இந்​தி, சம்​ஸ்​கிருதத்தை ஏற்​றுக்​கொண்​டால்​தான் தமிழகத்​துக்​கு தரவேண்​டிய ரூ.2 ஆயிரம் கோடியைத் தரு​வோம் என்று திமி​ராகப் பேசுகிறார் மத்​திய அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான். தமிழகத்​தின் கல்வி வளர்ச்​சி​யையே மொத்​த​மாக அழித்​து, ஒழித்​து​விடும் என்​ப​தால்​தான் அதை எதிர்க்​கிறோம்.

கல்விக்​குள் மாணவர்​களை கொண்​டுவர முயற்சி செய்​யாமல், கல்​வி​யில் இருந்து அவர்​களை நீக்​கு​வதற்​கான அத்​தனை செயல்​திட்​டங்​களும் தேசிய கல்விக் கொள்​கை​யில் உள்​ளன. அதனால்​தான் அதை ஏற்க மாட்​டோம் என்று சொல்​கிறோம். தமிழகம் இவர்​களின் சதி​களுக்கு எதி​ராக விடா​மல் போராடு​வதை அவர்​களால் தாங்​கிக்​கொள்ள முடிய​வில்​லை. ‘தமிழகத்​தைச் சேர்ந்​தவர்​கள் நாகரி​கம் இல்​லாதவர்​கள், அராஜக​வா​தி​கள் என்​று’ நாடாளு​மன்​றத்​தில் அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் நாவடக்​கம் இல்​லாமல் பேசி​யிருக்​கிறார்.

ஆனால், அரைமணி நேரத்​தில் அவர் பேசி​யதை திரும்​பப்​பெற வைத்​திருக்​கின்​றனர் நமது தமிழக எம்​.பி.க்​கள். அதி​முக உறுப்​பினர்​கள்​போல் பாஜக அரசுக்கு லாலி பாடா​மல் தமிழகத்​தின் உரிமைக்​காக யாருக்​கும் பயப்​ப​டா​மல் போராடு​வோம் என்று நிரூபித்​திருக்​கின்​றனர். இதே போர்க்​குணத்​துடன் தமிழகத்​துக்​காக தொடர்ந்து போராடு​வோம். இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

இவ்​விழா​வில், க.பொன்​முடி உள்​ளிட்ட அமைச்​சர்​கள், காஞ்​சிபுரம் எம்​.பி. க.செல்​வம், எம்​எல்​ஏக்​கள் வரலட்​சுமி மதுசூதனன், எஸ்​.ஆர்​.​ராஜா, கருணாநி​தி, அரவிந்த் ரமேஷ், பாலாஜி, பாபு, வரு​வாய்த் துறை செயலர்​ பெ.அ​மு​தா, மாவட்​ட இந்​து சமய அறங்​காவலர்​ குழு தலை​வர்​ மதுசூதனன்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்