மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி: பேருந்துகளில் அலைமோதிய கூட்டம்

By செய்திப்பிரிவு

தாம்பரம்: சென்னை எழும்பூர் - கடற்​கரை இடையே நான்​காம் வழித்​தடம் அமைக்​கும் பணி​கள் இறு​திக்​கட்​டத்தை எட்​டி​யுள்ள நிலை​யில் நேற்று காலை 5.10 மணி​முதல் மாலை 4.10 மணிவரை சென்னை கடற்​கரை - தாம்​பரம் இடையே புறநகர் மின்​சார ரயில் சேவை ரத்து செய்​யப்பட்டது. அதே​போல செங்​கல்​பட்​டு, காஞ்​சிபுரம், திரு​மால்​பூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்​கப்​படும் ரயில்​கள், தாம்​பரம் வரை மட்​டுமே இயக்​கப்​பட்டன.

பயணி​கள் வசதிக்​காக தாம்​பரம் - கோடம்​பாக்​கம் இடையே 30 நிமிட இடைவெளி​யில் சிறப்பு ரயில்கள் இயக்​கப்​பட்டன. ரயில்​கள் ரத்தால் ஆயிரக்​கணக்​கான பொது​மக்​கள் பேருந்​தில் செல்​வதற்​காக பேருந்து நிலை​யத்​தில் திரண்டதால் தாம்​பரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தாம்பரம் - கடற்கரை இடையே நேற்று பகல் முழுவதும் மின்சார ரயில் சேவை
நிறுத்தப்பட்டதால், குரோம்பேட்டை ரயில் நிலையம்
மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

30 நிமிட இடைவெளி​யில் சிறப்பு ரயில்​கள் இயக்​கப்​பட்​ட​தால் சிறப்பு ரயிலைப் பிடிப்​ப​தற்கு ஆயிரக்​கணக்​கானோர் கூடிய​தால் ரயில் நிலை​யத்​தி​லும் பரபரப்பு ஏற்​பட்​டது. மதி​யம் 12 ​முதல் 2 மணி வரை முழு​மை​யாக மின்​சார ரயில்​கள் ரத்து செய்​யப்​பட்​ட​தால் பயணி​கள் பேருந்து நிலை​யங்களுக்கு படையெடுத்தனர். 4.10 மணிக்கு பிறகு ஞாயிற்​றுக்​கிழமை அட்​ட​வணைப்​படி மின்​சார ரயில்​கள் மீண்​டும் இயக்​கப்​பட்​ட​தால், படிப்​படி​யாக கூட்ட நெரிசல்​ குறை​யத்​ தொடங்​கியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்