கொசு தொல்லையால் அவதிக்குள்ளாகும் சென்னை மக்கள்!

By ச.கார்த்திகேயன்

சென்னை​யில் ஒழிக்கவே முடியாத பிரச்​சினையாக கொசு தொல்லை உள்ளது. சென்னை மாநகரில் கூவம், அடையாறு, பக்கிங்​ஹாம் கால்​வாய், ஓட்டேரி நல்லா உள்ளிட்ட 30-க்​கும் மேற்​பட்ட நீர்​வழித் தடங்கள் உள்ளன. இவற்றி​லும், பெரும்​பாலான மழைநீர் வடிகால்​களி​லும் 365 நாட்​களும் கழிவுநீர் தேங்​கு​வ​தால், அவற்றில் கொசு உற்பத்​தி​யாகி, ஆண்டு முழு​வதும் கொசுத்​தொல்​லை​யால் மக்கள் அவதிப்​பட்டு வருகின்​றனர். குறிப்பாக பிப்​ர​வரி- மார்ச், ஆகஸ்ட்​-செப்​டம்பர் மாதங்​களில் கொசுத்​தொல்லை அதிகமாக உள்ளது.

சென்னை மாநகரம் முழு​வதும் கடந்த ஒரு மாதமாக கொசுத்​தொல்லை அதிகமாக உள்ளது. வீடு​களுக்குள் கொசு வலை அமைத்​திருந்​தா​லும், வாயில் கதவை திறக்​கும்​போது, கொசுக்கள் உள்ளே வந்து​விடு​கின்றன. படுத்து உறங்​கும்​போது, வலைகள் மீது படும் கை, கால்​களை​யும் கொசுக்கள் பதம்​பார்த்து​ விடு​கின்றன. ரத்தத்தை உறிஞ்சிய கொசுக்கள் பறக்க முடி​யாமல் தரையில் விழுந்து கிடக்​கின்றன. தூங்கி எழும் மக்கள் அதை மிதித்து வீடெங்​கும் ரத்த கறையாக காட்​சி​யளிக்​கிறது. கொசுத் தொல்​லை​யால் குறிப்பாக வட சென்னை மக்கள் இரவில் தூக்​கத்தை தொலைத்து வருகின்​றனர்.

இதுதொடர்பாக சென்னை​வாழ் மக்கள் கூறிய​தாவது: இரவில் எங்களால் தூங்க முடிய​வில்லை. மாநக​ராட்சி சார்​பில் புகை பரப்பு​வதையே பிரதான பணியாக மேற்​கொள்​கின்​றனர். கொசு உற்பத்தி ஆதாரங்களை தேடுவதே இல்லை. மாநக​ராட்சி மன்ற கூட்​டத்​தில் கொசு தொல்லை தொடர்பாக பேசும் கவுன்​சிலர்கள் புகை பரப்பும் இயந்​திரத்தை அனுப்பவே கோரு​கின்​றனர்.

கொசுவை சாகடிக்காத ஒரு முறையை எதற்காக பயன்​படுத்து​கின்​றனர் என்றே தெரிய​வில்லை. உண்மை​யில் சென்னை​யில் கொசு சாகிறது என்றால், அது கொசுபேட்​டால் மட்டுமே சாத்​தி​ய​மாகிறது. இப்போது அதிகரித்​திருக்​கும் கொசுக்​களால் அந்த பேட்டுகளே செயலிழக்​கும் நிலை ஏற்பட்​டுள்​ளது. குறைந்தது 100-க்​கும் மேற்​பட்ட கொசுக்களை பேட் மூலம் கொன்று வருகிறோம். அந்த அளவுக்கு கொசு பல்கி பெரு​கி​ உள்​ளது.

உயரதி​காரி​களிடம் புகார் கூறினால், சென்னை​யில் ஏராளமான ஆறுகளும், கால்​வாய்​களும், மழைநீர் வடிகால்​களும் உள்ளன. அதில் விதிகளை மீறி கழிவுநீர் விடப்​படு​கிறது. இதை தடுக்க வேண்டிய சென்னை குடிநீர் வாரி​யத்தை மாநக​ராட்சி கட்டுப்​படுத்த முடி​யாது. அதனால் கொசு ஒழிப்பு சாத்​தி​யமில்லை என கை விரிக்​கின்​றனர்.

அறிவியல் ரீதியிலான நடைமுறை இல்லாத​தால், நீர்​நிலைகளில் கொசுப்பு​ழுக்களை அழிக்க எம்எல்ஓ எண்ணெய்களை ஊற்றி இயற்​கை​யாக, கொசுப்பு​ழுக்களை உண்ணும் உயிரினங்​களான டிப்​லோனிகஸ் இன்டிகஸ் போன்ற​வற்றை மாநக​ராட்சி அழித்து​விட்​டது. மாலை நேர கொசுக்களை அழிக்க, காலை​யில் புகை பரப்​பப்​படு​கிறது.

காற்று பலமாக வீசும் கடலோர நகரமான சென்னையில் புகை பரப்புதல் பயனளிக்​காது. ஆறுகள், கால்​வாய்கள் தவிர்த்து, குடி​யிருப்பு பகுதி​களில் மறைந்​திருக்​கும் கொசுப்புழு உற்பத்தி ஆதாரங்களை கண்டறிய முற்​படு​வ​தில்லை. இதனால் தான் கொசுக்களை ஒழிக்க முடிய​வில்லை. மாநக​ராட்சி நிர்​வாகம் புகை பரப்பு

வதை முற்றி​லுமாக நிறுத்​தி​விட்டு, கொசு புழு உற்பத்தி ஆதாரங்களை அழிக்க நடவடிக்கை எடுத்​தால் தான் கொசுக்களை ஒழிக்க முடி​யும். இதுகுறித்து மாநக​ராட்சி கவுன்​சிலர்​கள், மேயர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி​களுக்கு மாநக​ராட்சி நிர்​வாகம் பயிற்சி அளிக்க வேண்​டும். சரியான நடைமுறையை கடைப்பிடித்​தால்மாதம் ரூ.15 கோடி மாநக​ராட்​சிக்கு மிச்​ச​மாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கூறிய​தாவது: எம்பிபிஎஸ் மற்றும் டிபிஎச் முடித்​தவர்களை தான் மண்டல சுகாதார அலுவலர்​களாக நியமிக்க வேண்​டும். ஆனால் ஆள் இல்லை எனக்​கூறி எம்பிபிஎஸ் மட்டும் முடித்த, மருத்துவ சிகிச்​சை​யில் அனுபவம் பெற்​றவர்​களை, பொது சுகாதார நடவடிக்கை​யில் ஈடுபடுத்து​கின்​றனர். அவர்​களுக்கு கொசு உள்ளிட்ட பூச்​சி​யியல் குறித்து போதிய அனுபவம் இல்லை.

அதனால் புகை பரப்பு​வதையே பிரதான கொசு ஒழிப்பு பணியாக மேற்​கொள்ள எங்களை வலியுறுத்து​கின்​றனர். இந்த பணிகளை பூச்​சி​யியல் வல்லுநர்​களால் மட்டுமே திறம்பட செய்ய முடி​யும். ஆனால் பூச்​சி​யியல் வல்லுநர்​கள், மருத்​துவர்​களின் கீழ் வேலை செய்​வ​தால், அவர்களை மீறி செயல்பட முடிய​வில்லை. கொசுக்​களும் ஒழிய​வில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பி.தன்​ராஜ்

சென்னை​யில் கொசுக்களை ஒழிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மாநக​ராட்​சி​யின் முன்​னாள் தலைமை நோய்க்​கடத்தி கட்டுப்​பாட்டு அலுவலர் மற்றும் பூச்​சி​யியல் வல்லுநர் பி.தன்​ராஜ் கூறிய​தாவது: நகர்ப்புற உள்ளாட்சி சட்டத்தை செயல்​படுத்துவது மாநக​ராட்​சி​யின் கடமை. மற்ற துறை சார்ந்த அனைத்து விதி​களை​யும் மாநக​ராட்சி செயல்​படுத்திய நிலை​யில், சுகா​தா​ரத்​துறை விதிகளை மட்டும் இத்தனை மாதங்​களாக செயல்​படுத்​தாதது ஏன்? சென்னை​யில் கொசு ஒழிப்பு பணியை, மாநகரின் புவி​யியல் அமைப்பு, உலக சுகாதார நிறுவன வழிகாட்டு​தல், வானிலை மற்றும் கடல் அலை நிலவரம், மாநகரின் நிதி​நிலை இவற்றின் அடிப்​படை​யில் திட்டமிட வேண்​டும்.

உலக சுகாதார நிறுவன வழிகாட்டு​தலில், கொசுத் தொல்லை மற்றும் கொசுவால் பரவும் நோய்களை கட்டுப்​படுத்த முதலில் கொசுப்புழு ஒழிப்​புக்கு முக்​கி​யத்துவம் கொடுக்க வேண்​டும். புகை பரப்புவது அபாயகர​மானது. அது மனிதர்​களின் உடல் நலனை பாதிக்​கும். மாநக​ராட்​சிக்கு செலவும் அதிகம். கொசுவால் பரவும் நோய் கட்டுக்​கடங்​காமல் செல்​லும் பட்சத்​தில், கடைசி வாய்ப்பாக மட்டுமே முதிர் கொசுக்களை அழிக்க புகை மருந்​துகளை பரப்ப வேண்​டும் என்று அறிவுறுத்​தி​யுள்​ளது.

புகை பரப்புவது அன்றாட கொசு ஒழிப்புபணியாக மேற்​கொள்ளவே கூடாது. ஆனால் சென்னை மாநக​ராட்சி மட்டுமல்​லாது நாட்​டின் பெரும்​பாலான நகர்ப்பு​றங்​களில் கொசுவை ஒழிக்க முதல் மற்றும் கடைசி தீர்வாக புகை பரப்புவதை மட்டுமே செய்​கின்​றனர். தொடர்ந்து புகை பரப்​பினால், கொசுக்​களுக்கு எதிர்ப்​பாற்றல் அதிகரிக்​கும். அப்போது இந்த மருந்​துக்கு கட்டுப்​படாது.

மருந்​தின் அடர்த்தியை கூட்​டி​னால், மனிதர்களை கடுமையாக பாதிக்​கும். சென்னை மாநகரம் கடலோரப் பகுதி. எப்போதும் கடல் காற்று வீசிக்​கொண்​டிருக்​கும். இங்கு புகை பரப்பும்​போது, புகை மருந்து காற்றில் சிதைந்​து​விடும். முதிர் கொசுக்களை அழிக்​காது. மாநக​ராட்​சி​யில் பயன்​படுத்​தப்​படும் மாலத்​தி​யான், நாளடை​வில் மனிதர்​களுக்​கும், குறிப்பாக ஆஸ்துமா போன்ற சுவாசக்​கோளாறு உள்ளவர்​களுக்​கும் கடும் பாதிப்பை ஏற்படுத்​தக்​கூடியது.

அதை சென்னை போன்ற வெயில் அதிகம் உள்ள நகரங்​களில் வெளிப்பு​றங்​களில் பயன்​படுத்​தக்​கூடாது. சென்னை​யில் கொசு பு​ழுக்களை ஒழிக்​கும் பணிகளை மட்டுமே மேற்​கொள்ள வேண்​டும். கூவம், அடையாறு போன்ற​வற்றின் முகத்து​வாரங்களை திறந்து, கடல் நீர் ஆற்றுக்​குள் வந்து சென்​றாலே கொசுத்​தொல்லை கட்டுக்​குள் வந்து​விடும்.

எனவே மாநக​ராட்சி நிர்​வாகம், புகை பரப்புதல் இல்லாத கொசு ஒழிப்பு கொள்​கையை அறிவித்து செயல்​படுத்த வேண்​டும். கொசுக்​களுக்கு எந்த அளவுக்கு புகை மருந்து எதிர்ப்பு திறன் உள்ளது என ஒரு ஆய்வை​யும் நடத்த வேண்​டும்.

ஒரு காலத்​தில் நோய்க்​கடத்தி கட்டுப்​பாட்டு அலுவலர், கொசு ஒழிப்பு மூலம் மலேரியா தடுப்பு பணியை மட்டுமே மேற்​கொண்டு வநதார். அதன் பின்னர் மலேரியா ஒழிந்து டெங்கு அதிகரித்து, ஏராளமான உயிரிழப்புகளை ஏற்படுத்​தி​யது. அதன் தொடர்ச்​சியாக லெப்டோ பைரோசிஸ் போன்ற எலிக்​காய்ச்​சல்​களும் நகர்ப்பு​றங்​களில் அதிகரித்​தது. அதை அரசு ஒப்புக்​கொள்​வ​தில் பல்வேறு அரசி​யல்கள் உள்ளன.

இந்த நிலை​யில் தான் தமிழக அரசு நகர்ப்புற உள்ளாட்சி விதிகளை கடந்த ஆண்டு வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி, மாநகர சுகா​தா​ரத்​துறை மருத்​துவம், சுகா​தா​ரம், பொது சுகா​தாரம் என பிரிக்​கப்​பட்​டுள்​ளது. மாநகர மருத்துவ அலுவலர் தலைமை​யில் மருத்​துவ​மும், தலைமை நோய்க்​கடத்தி கட்டுப்​பாட்டு அலுவலர் தலைமை​யில் சுகா​தா​ர​மும், மாநகர நல அலுவலர் தலைமை​யில் பொது சுகா​தா​ர​மும் செயல்பட வேண்​டும் என தெளிவாக வரையறுத்​துள்ளது. தலைமை நோய்க்​கடத்தி கட்டுப்​பாட்டு அலுவலருக்கு அதிக அதிகாரம் வழங்​கி​யுள்​ளது.

இந்த விதிகளை பல்வேறு ஐஏஎஸ் அதிகாரி​கள், துறை சார்ந்த வல்லுநர்கள் தயாரித்​துள்ளனர். அரசிதழில் வெளிவந்து, அமலிலும் இருக்​கிறது. ஆனால் சென்னை ​மாநக​ராட்​சி​யில் இதுவரை செயல்​பாட்டுக்கு வர​வில்லை. இவ்​வாறு அவர் கூறினார். இது தொடர்பாக ​மாநக​ராட்சி ஆணை​யர் ஜெ.குமரகுருபரனிடம் கேட்​ட​போது, "இது சீரியசான பிரச்​சினை. ​கொசுக்களை ஒழிப்​ப​தற்கான ​மாற்று ​திட்​டம்​ குறித்​து ஆலோசிக்​கப்​படும்​" என்​றார்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்