சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை: சமரசமாக பேசி முடிவெடுக்க உச்ச நீதி​மன்றம் அவகாசம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நடிகை விஜயலட்​சுமி விவ​காரத்​தில் நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானுக்கு எதி​ரான பாலியல் வழக்கு விசா​ரணைக்கு உச்ச நீதி​மன்​றம் இடைக்​காலத் தடை விதித்​துள்​ளது.

சீமான், தன்னை திரு​மணம் செய்து கொள்​வ​தாகக் கூறி பாலியல்​ரீ​தி​யாக ஏமாற்​றி​விட்​ட​தாக நடிகை விஜயலட்​சுமி கடந்த 2011-ம் ஆண்டு வளசர​வாக்​கம் போலீ​ஸில் புகார் அளித்​தார். அதன்​பேரில் போலீ​ஸார் சீமான் மீது பாலியல் துன்​புறுத்​தல் உள்​ளிட்ட பிரிவு​களின் கீழ் கடந்த 2011-ம் ஆண்டு வழக்​குப்​ ப​திவு செய்​திருந்​தனர்.

இந்த வழக்கை ரத்து செய்​யக்​கோரி சீமான் தாக்​கல் செய்​திருந்த மனுவை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்ற தனி நீதிப​தி, கடந்த பிப்​.17-ம் தேதி சீமான் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடி​யாது என மறுப்பு தெரி​வித்​தார். மேலும், கருக்​கலைப்பு உள்​ளிட்ட குற்​றச்​சாட்​டு​களுக்கு முகாந்​திரம் உள்​ள​தால், சீமானுக்கு எதி​ரான பாலியல் வழக்​கில் 12 வார காலத்​துக்​குள் இறுதி அறிக்​கையை தாக்​கல் செய்ய வேண்​டுமென வளசர​வாக்​கம் போலீ​ஸாருக்கு உத்​தர​விட்டு சீமான் தாக்​கல் செய்​திருந்த மனுவை தள்​ளு​படி செய்​தார். சென்னை உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வுப்​படி சீமான் வளசர​வாக்​கம் காவல் நிலை​யத்​தில் ஆஜராகி போலீ​ஸார் கேட்ட பல்​வேறு கேள்வி​களுக்கு பதிலளித்​தார். இந்​நிலை​யில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் உத்​தர​வுக்கு தடை கோரி சீமான் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​திருந்​தார்.

இந்த மனு நீதிபதி பி.​வி.​நாகரத்னா தலை​மையி​லான அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது சீமான் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் கோபால் சங்​கர​நா​ராயணன், ‘‘மனு​தா​ர​ரான சீமானுக்கு எதி​ராக கடந்த 2011-ம் ஆண்டு அளிக்​கப்​பட்ட இந்த பாலியல் புகார் அரசி​யல் காரணங்​களுக்​காக மீண்​டும் தூசி தட்​டப்​பட்​டுள்​ளது. சீமானுக்கு எதி​ராக புகார் அளித்த அந்த நடிகையே 3 முறை வழக்கை திரும்​பப்​பெற்​றுள்​ளார். விஜயலட்​சுமி​யுடன் பழக்​கம் இருந்து பின்​னர் இரு​வரும் பிரிந்து விட்​டனர். சீமானுக்கு எதி​ரான புகாரை திரும்​பப் பெற்​றுக்​கொள்​வ​தாக அவரே கடித​மும் கொடுத்​துள்​ளார். தற்​போது சீமானை துன்​புறுத்​தும் நோக்​கில் பழைய புகாரின் பேரில் பதி​யப்​பட்ட வழக்​கில் இறுதி அறிக்கை தாக்​கல் செய்ய சென்னை உயர் நீதி​மன்​ற​மும் உத்​தர​விட்​டுள்​ளது. இதனால் சீமானின் அரசி​யல் பொது​வாழ்​வுக்கு கடும் பாதிப்பு ஏற்​பட்​டுள்​ளது’’ என்​றார்.

அப்​போது குறுக்​கிட்ட நீதிப​தி​கள், ‘‘இத​னால் புகார் அளித்த அந்த பெண்​ணும் பாதிக்​கப்​பட்​டுள்​ளார் தானே. அதை​யும் கருத்​தில் கொள்ள வேண்​டும். பாலியல்​ரீ​தி​யாக பாதிக்​கப்​பட்ட அந்த பெண்​ணுக்கு இழப்​பீடு எது​வும் வழங்​கப்​பட்​டுள்​ள​தா?’’ என்​றனர்.

அதற்கு சீமான் தரப்​பில், ‘‘விஜயலட்​சுமி​யுடன் தனிப்​பட்ட முறை​யில் பேச்​சு​வார்த்தை நடத்தி உரிய இழப்​பீடு வழங்க முயற்​சிகள் மேற்​கொண்டு வரு​கிறோம்’’ என தெரிவிக்​கப்​பட்​டது. அதையடுத்து நீதிப​தி​கள், சீமானுக்கு எதி​ராக நடிகை விஜயலட்​சுமி அளித்த புகார் மீதான பாலியல் வழக்​கின் விசா​ரணைக்கு இடைக்​கால தடை விதித்​தனர். அந்த வழக்​கில் விசா​ரணை மேற்​கொண்டு 12 வார காலத்​துக்​குள் இறுதி அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டுமென்ற உயர் நீதி​மன்ற உத்​தர​வுக்​கும் தடை விதித்​ததோடு, இந்த மேல்​முறை​யீட்டு வழக்​கில் எதிர்​மனு​தா​ரர்​கள் பதிலளிக்க நோட்​டீஸ் பிறப்​பித்​தனர். பின்​னர், விசா​ரணையை மே மாதத்​துக்கு தள்​ளி​வைத்​தனர். மேலும் இந்த இடைப்​பட்ட காலத்​தில் உரிய இழப்​பீடு வழங்​கு​வது தொடர்​பாக இருதரப்​பிலும் சமரச​மாக பேசி முடி​வெடுக்க வேண்​டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்