மலைவாழ் மக்கள் பட்டா பெற முடி​யாமல் தவிக்கும் நிலை: தமிழக அரசு மீது மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்​றச்​சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: வன உரிமை சட்டத்தை தமிழக அரசு ஆமை வேகத்​தில் செயல்​படுத்து​வ​தால், மலைவாழ் மக்கள் பட்டா பெற முடி​யாமல் தவிப்​பதாக மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்​றம்​ சாட்​டி​யுள்​ளது. நில உரிமை​யும், பழங்​குடி மக்களின் இனச்​சான்று, இடஒதுக்​கீடு அடிப்​படை​யில் வேலை​வாய்ப்பும் கோரி சென்னை​யில் நேற்று தமிழ்​நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்​பில் ஆர்ப்​பாட்டம் நடைபெற்​றது.

ஆர்ப்​பாட்​டத்தை தொடங்கி வைத்து மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி​யின் மாநில செயலாளர் பி.சண்​முகம் பேசி​ய​தாவது: ஆதிதிரா​விடர், பழங்​குடி​யினர் நல பள்ளி​களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்​படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்​டும். ஒதுக்​கப்​படும் நிதி முழு​மையாக செலவழிக்​கப்​படு​கிறதா என்பதை அரசு கண்காணிக்க வேண்​டும்.

வன உரிமைச் சட்டத்​தின்​கீழ் இதுவரை 15,442 மலைவாழ் குடும்​பங்​களுக்கு வன உரிமை பட்டா வழங்​கப்​பட்​டுள்​ளது. இச்சட்டம் கொண்டு வரப்​பட்டு 17 ஆண்டுகள் ஆகிறது. இச்சட்​டத்​தைக் கண்காணிக்க தலைமைச் செயலாளர் தலைமை​யில் ஒரு குழு உள்ளது. ஆனால், இக்குழு இதுவரை கூட்​டப்​பட​வில்லை.

ஆமை வேகத்​தில் இச்சட்டம் நடைமுறைப்​படுத்​தப்​படுத்துவதால் மலைவாழ் மக்கள் பட்டா பெற முடியாமல் தவிக்கின்றனர். சொந்த வீடு இல்லாத அனைத்து ஆதிவாசி குடும்​பங்​களுக்​கும் இச்சட்​டத்​தின்​கீழ் பட்டா வழங்க வேண்​டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்