“அண்ணா சாலைக்கு தனி ஆளாக வருகிறேன்” - உதயநிதி சவாலை ஏற்றார் அண்ணாமலை

By செய்திப்பிரிவு

சேலம்: சென்னை அண்ணா சாலைக்கு தனி ஆளாக வருகிறேன். இடமும், நேரமும் குறிப்​பிட்டுச் சொல்​லுங்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

சேலத்​தில் திருமண நிகழ்ச்​சி​யில் பங்கேற்க நேற்று வந்திருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் மாணவர்கள் 3 மொழிகளைப் படிக்க வேண்​டுமா என்பது​தான் தற்போது முக்​கியப் பிரச்​சினையாக உள்ளது. தனியார் பள்ளி​களில் பயிலும் மாணவர்​களின் எண்ணிக்கை 56 லட்சத்​தைக் கடந்​து​விட்​டது. அரசுப் பள்ளி​களில் 52 லட்சம் மாணவர்கள் பயில்​கின்​றனர்.

சிபிஎஸ்இ பள்ளி​களின் எண்ணிக்கை 200-ல் இருந்து 2,010-ஆக அதிகரித்​துள்ளது. மக்கள் தனியார் பள்ளிகளை விரும்​பு​கின்​றனர். திமுக​வினர் நடத்​தும் சிபிஎஸ்இ பள்ளி​கள், விசிக தலைவர் சேர்​மேனாக இருக்​கும் சிபிஎஸ்இ பள்ளி ஆகிய​வற்றில் இந்தி கட்டாயப் பாடமாக உள்ளது. தவெக தலைவர் விஜய் சிபிஎஸ்இ பள்ளி நடத்து​கிறார். ஆனால், இவர்கள் அரசுப் பள்ளி​களில் இருமொழிக் கொள்​கை​தான் வேண்​டும் என்கின்​றனர்.

அரசுப் பள்ளி​களில் 3 மொழிகள் வேண்​டும் என்பது பிரதமரின் விருப்​பம். தமிழ் பாட மொழி​யாக​வும், ஆங்கிலம் மற்றும் ஏதேனும் ஒரு விருப்ப மொழி இருக்கவேண்​டும் என்பது​தான் பாஜக​வின் நோக்​கம். அரசுப் பள்ளி மாணவர்​களுக்கு இலவச உணவு, சீருடை, காலணி கொடுப்​பதாக உதயநிதி கூறுகிறார். அவரது தாத்தா, அப்பா வீட்டுப் பணத்​திலா இதை செய்​கிறார். தமிழக அரசு கல்விக்காக ஆண்டு​தோறும் ரூ.44 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கு​கிறது. ஆனால், மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி வழங்​காத​தால், தமிழகத்​தில் பள்ளிகளை நடத்த முடிய​வில்லை என்று கூறுவதை எப்படி ஏற்க முடி​யும்?

குடியரசு தலைவரிடம்... மும்​மொழிக் கொள்​கைக்கு ஆதரவாக தமிழகத்​தில் மார்ச் 1-ம் தேதி முதல் கையெழுத்து இயக்கம் நடத்தி, குடியரசுத் தலைவரிடம் அவற்றை வழங்​கு​வோம். தமிழகத்​தில் பெண்​கள், குழந்தை​களுக்கு எதிரான குற்​றங்கள் அதிகரித்​துள்ளதாக ஏடிஜிபி அறிக்கை வெளி​யிடு​கிறார். ஆனால், சட்டம்​-ஒழுங்கு நன்றாக உள்ளதாக முதல்வர் கூறுகிறார்.

கும்​பமேளா​வில் பங்கேற்​கிறேன்: நான் கும்​பமேளா​வில் பங்கேற்கச் செல்​கிறேன். வரும் 26-ம் தேதிக்​குப் பின்னர் தமிழகத்​தில் இருப்​பேன். அப்போது, துணை முதல்வர் உதயநிதி கேட்​டபடி சென்னை அண்ணா சாலைக்கு தனி ஆளாக வருகிறேன். எந்த இடத்​துக்கு, என்ன நேரத்​தில் வர வேண்​டும் என்று குறிப்​பிட்டுச் சொல்​லுங்​கள். திமுக ஐ.டி. விங் மற்றும் அரசு இயந்​திரங்​களைப் பயன்​படுத்தி, எக்ஸ் தளத்​தில் ‘கெட்​-அவுட் மோடி’ என்று டிரென்​டிங் செய்​துள்ளனர். ஸ்டா​லின் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்​டும் என ‘கெட்​-அவுட் ஸ்டா​லின்’ என எக்ஸ் தளத்​தில் நாளை (இன்று) பதிவிடப்​போகிறோம். யார் அதிகமாக டிரென்​டிங் செய்​தனர் என்ப​தைப் பார்த்து​விடு​வோம்.

அண்ணாமலை தரம் தாழ்ந்து பேசுகிறார் என்று உதயநிதி கூறுகிறார். எதிர்க்​கட்​சித் தலைவர் பழனிசாமி உள்ளிட்​டோரை தரம் தாழ்ந்து பேசி​யவர் உதயநிதி.கும்​பமேளா​வுக்கு 70 கோடி பேர் வந்துள்ளனர். அங்கு பக்தர்​களுக்​காக, சிறப்பான ஏற்பாடுகளை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்​யநாத் செய்து கொடுத்​துள்ளார். ஆனால், சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்​சி​யைக் ​காணவந்த 10 லட்சம் பேருக்கு வசதி செய்து ​கொடுக்க தமிழக அரசால் ​முடிய​வில்லை. இவ்​வாறு அண்ணாமலை கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்