தமிழக மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

By எஸ். முஹம்மது ராஃபி


ராமேசுவரம்: மன்னார் மற்றும் நெடுந்தீவு கடற்பகுதியில் தனித்தனியாக 3 விசைப்படகுகளை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர், படகுகளிலிருந்த 10 தமிழக மீனவர்களை கைது செய்தனர்.

ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற முனியேந்திரன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினர் மன்னார் கடற்பகுதியில் புதன்கிழமை இரவு சிறைப்பிடித்து படகுகளிலிருந்த ஜோதிராஜன், ராமு, அருள்ஜார், ஜான் கென்னடி ஆகிய 4 மீனவர்களை கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

மேலும் ராமேசுவரத்திலிருந்து கடலுக்கு சென்ற சூசை வியாகுலம், ஆல்ட்ரின் ஆகிய இருவருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் வியாழக்கிழமை அதிகாலை சிறைப்பிடித்தனர். இந்தப் படகுகளிலிருந்த ஜான் முத்துக்குமார், லவ்சன், பவுல்ராஜ், அந்தோணி செல்வம், ஜான்போஸ்கோ, ஜான்ராஜ் ஆகிய 6 மீனவர்களை கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தமிழக மீனவர்கள் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்ற காவலில் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் சிறையில அடைக்கப்பட உள்ளனர்.

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து 13 படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு 99 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரால் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்