மறைந்த அரசு மருத்துவர் லட்சுமி நரசிம்மனின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி வழங்கியதாக கூறியது தவறான தகவல்: மருத்துவ கல்வி இயக்குநர் சங்குமணி

By செய்திப்பிரிவு

சென்னை: மறைந்த அரசு மருத்துவர் லட்சுமி நரசிம்மன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்கியதாக தெரிவித்தது தவறானது. தவறான தகவலுக்கு வருந்துகிறோம் என மருத்​துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்​குநர் மருத்துவர் ஜெ.சங்​குமணி விளக்கம் அளித்துள்ளார்.

அரசு மருத்​துவர்​களுக்கு நியாயமான ஊதியம் உள்ளிட்ட பலன்கள் கிடைக்​கும் வகையில் அரசாணை 354-ஐ அமல்​படுத்தக் கோரி இறுதிவரை போராடியவர் அரசு மருத்​துவர் லட்சுமி நரசிம்​மன். இவர் கடந்த 2020 பிப்​.6-ம் தேதி உயிரிழந்​தார். இருப்பினும் இதுவரை அரசாணை அமலாகாததால், ‘மருத்​துவர் லட்சுமி நரசிம்​மனின் உயிர்த் தியாகத்​துக்கு மதிப்​பில்​லை​யா?’ என்ற தலைப்​பில் அரசு மருத்​துவர்​களுக்கான சட்டப் போராட்​டக்​குழு தலைவர் எஸ்.பெரு​மாள் பிள்ளை எழுதிய கட்டுரை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கடந்த 7-ம் தேதி வெளி​யானது.

இதற்கு மறுப்பு தெரி​வித்து, மருத்​துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்​குநர் மருத்துவர் ஜெ.சங்​குமணி வெளி​யிட்ட அறிக்கை​யில், “மருத்துவர் சங்கங்​களுக்​குள் நிலவும் கருத்து வேறு​பாடு காரணமாக அரசாணை 354-ஐ அமல்​படுத்துவது குறித்து தீர்வு எட்டப்​பட​வில்லை. ஒற்றுமை​யுடன் ஒருமித்த கருத்தை மருத்துவர் சங்கங்கள் தெரி​வித்​தால், கோரிக்கையை நிறைவேற்ற அரசு தயாராக உள்ளது.

மறைந்த மருத்​துவர் லட்சுமி நரசிம்மன் வாரிசு​தா​ரர்​களுக்கு பணி வழங்க அமைச்சர் உத்தர​விட்டும், இதுவரை அவர்கள் ஏற்க முன்​வர​வில்லை. பணியின்​போது உயிரிழந்த லட்சுமி நரசிம்மன் உள்ளிட்ட 6 மருத்​துவர்​களின் வாரிசு​தா​ரர்​களுக்கு தலா ரூ.1 கோடி நிதி, கடந்த ஜன.10-ம் தேதி வழங்​கப்​பட்​டது” என தெரி​வித்​திருந்​தார். இந்த செய்தி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கடந்த 8-ம் தேதி வெளி​யானது.

இதையடுத்து, கடந்த 9-ம் தேதி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழை தொடர்பு கொண்ட மறைந்த லட்சுமி நரசிம்​மனின் மனைவி அனுராதா, “எங்கள் குடும்பத்​துக்கு ரூ.1 கோடி நிதி கொடுத்​த​தாக​வும், பணி நியமன ஆணை வழங்​கிய​தாக​வும் கூறுவது முற்றிலும் உண்மைக்கு மாறானது.

ரூ.1 கோடி​யும் கொடுக்க​வில்லை. பணிநியமன ஆணையும் வழங்​க​வில்லை. இந்த இரண்​டை​யும் நாங்கள் கோரியதும் இல்லை. உண்மைக்கு மாறான தகவலை தெரி​வித்​ததற்காக நீதி​மன்றம் செல்ல இருக்​கிறேன்” என்று தெரிவித்திருந்தார். இதேபோல் சட்டப் போராட்​டக்​குழு தலைவர் எஸ்.பெரு​மாள் பிள்ளையும் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், நேற்று மருத்​துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்​குநர் மருத்துவர் ஜெ.சங்​குமணி வெளி​யிட்ட அறிக்கை​யில், “மருத்துவர் லட்சுமி நரசிம்மனின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி கார்ப்பஸ் ஃபண்டில் (Corpus Fund) இருந்து நிதி வழங்கப்பட்டுள்ளது என்பது தவறான தகவல். தவறான தகவலுக்கு வருந்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்