தமிழக மீனவர் படகை ஏலம் விட்ட இலங்கை நீதிமன்றம்

By எஸ். முஹம்மது ராஃபி


ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக படகு ஒன்று அந்நாட்டு நீதிமன்றத்தினால் ஏலம் விடப்பட்டது.

27.12.2022ல் நாகை மாவட்டம் கோடியக்கரை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற பைபர் படகில் 4 மீனவர்கள் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடற்பகுதியில் அந்நாட்டு மீனவர்களால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

வல்வெட்டுத்துறை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பருத்தித்துறை நீதிமன்றம் 4 மீனவர்களை மட்டும் விடுதலை செய்து பைபர் படகையும் அதிலிருந்த உபகரணங்களையும் நாட்டுடமையாக்கியது.

இந்நிலையில், நாட்டுடமையாக்கப்பட்ட இந்த படகு, மோட்டார், வலைகள், நங்கூரம், குளிர்சாதனப் பெட்டி, ஜிபிஎஸ் கருவி ஆகியன பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்தில் ஏலமிடப்பட்டது.

இவை தனித்தனியாக மொத்தம் இலங்கை மதிப்பில் 5 லட்சத்து 60 ஆயிரத்து 100 ரூபாய்க்கு (இந்திய மதிப்பில் ரூ.1.65 ஆயிரம்) பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்