ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக படகு ஒன்று அந்நாட்டு நீதிமன்றத்தினால் ஏலம் விடப்பட்டது.
27.12.2022ல் நாகை மாவட்டம் கோடியக்கரை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற பைபர் படகில் 4 மீனவர்கள் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடற்பகுதியில் அந்நாட்டு மீனவர்களால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
வல்வெட்டுத்துறை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பருத்தித்துறை நீதிமன்றம் 4 மீனவர்களை மட்டும் விடுதலை செய்து பைபர் படகையும் அதிலிருந்த உபகரணங்களையும் நாட்டுடமையாக்கியது.
இந்நிலையில், நாட்டுடமையாக்கப்பட்ட இந்த படகு, மோட்டார், வலைகள், நங்கூரம், குளிர்சாதனப் பெட்டி, ஜிபிஎஸ் கருவி ஆகியன பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்தில் ஏலமிடப்பட்டது.
» ‘‘தமிழக ஸ்டைலில் பேசட்டுமா?’’ - பத்திரிகையாளர் சந்திப்பை பாதியில் முடித்த எல். முருகன்
» திருப்பரங்குன்றம் விவகாரம் | மதவெறி அமைப்புகளை புறக்கணிக்க திமுக கூட்டணி வேண்டுகோள்
இவை தனித்தனியாக மொத்தம் இலங்கை மதிப்பில் 5 லட்சத்து 60 ஆயிரத்து 100 ரூபாய்க்கு (இந்திய மதிப்பில் ரூ.1.65 ஆயிரம்) பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago