“தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கான சூழல் வந்துவிட்டது” - அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சி மட்டுமே அமையும். அதற்கான சூழல் வந்துவிட்டது, என பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் பாமக சார்பில், சேலம் மாவட்ட பாமக சொந்தங்களுடன் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. மாநகர மாவட்டச் செயலாளர் அருள் எம்எல்ஏ தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கதிர்.ராசரத்தினம் முன்னிலை வகித்தார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

கூட்டத்தில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: ஒடுக்கப்பட்ட சமுதாயம் முன்னுக்கு வர வேண்டுமென பாமக எத்தனையோ போராட்டங்களை நடத்தி உள்ளது. இந்திய அளவில் 2 இட ஒதுக்கீடு சட்டங்களையும், தமிழகத்தில் 4 இடஒதுக்கீடு சட்டங்களையும் கொண்டு வந்த ஒரே தலைவர் டாக்டர் ராமதாஸ்.

வன்னியர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க எம்ஜிஆர் சட்டம் கொண்டு வர இருந்தார். உடல் நலக்குறைவால் அவர் மறைந்தார். ஜெயலலிதா, நன்மையும் செய்யவில்லை. தீமையும் செய்யவில்லை.

கருணாநிதி, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்தார். வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை பழனிசாமி கொண்டு வந்தார். ஆனால், அந்த சட்டம் சரிவர நிறைவேற்றப்படவில்லை என்பதால், நீதிமன்றத்துக்கு சென்றபோது, அது ரத்து செய்யப்பட தமிழக முதல்வர் ஸ்டாலின் காரணமாக இருந்தார். வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்து, மூன்று ஆண்டுகளாகிவிட்டது. ஆனால், முதல்வர் ஸ்டாலின் அதனை செய்யவில்லை. வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்தவர் முதல்வர் ஸ்டாலின்.

மேட்டூர் அணை உபரி நீர் திட்டம் செயல்படுத்த வேண்டும் என்று பாமக தான் முதலில் வலியுறுத்தி, போராட்டங்களை நடத்தியது. மேட்டூர் உபரி நீரை திருமணிமுத்தாறு, சரபங்கா நதி, வசிஷ்ட நதி ஆகியவற்றுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் பாமகவின் திட்டம். சேலத்தில் ரயில்வே கோட்டம் அமைய வேண்டும் என்ற கோரிக்கை காமராஜர் காலத்திலே இருந்தது. அதனை பாமக தான் கொண்டு வந்தது.

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளின் மணிமண்டபத்தை விழுப்புரத்தில் முதல்வர் திறந்து வைத்துள்ளார். அந்த தியாகிகளின் குடும்பத்தை, வட்டாட்சியர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து சந்தித்துப் பேசி, கருணாநிதி மற்றும் திமுக-வைப் புகழ்ந்து பேச வைத்து, வீடியோ எடுத்துள்ளனர். நாங்கள் மணிமண்டபம் கேட்கவில்லை, வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு தான் கேட்கிறோம். தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சி மட்டுமே அமையும். அதற்கான சூழல் வந்துவிட்டது, என்றார்.

தொடர்ந்து, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியது: எல்லா சமய, சமுதாய மக்களும் ஒற்றுமையாக, அமைதியாக வாழ வேண்டும். அவரவர்க்கு உரிய இட ஒதுக்கீடு பெற வேண்டும் என்பது தான் பாமக-வின் நோக்கம். மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு, என்னுடைய நண்பர் வீரபாண்டியார் முக்கிய பங்கு வகித்தார். தமிழகம், மது, கஞ்சாவில் சீரழிந்து கிடக்கிறது.

3 மாதங்களுக்கு நாங்கள் சொல்வதை தமிழக அரசு கேட்டால், தமிழகத்தில் எந்த போதைப்பொருளும் இருக்காது. டாஸ்மாக் மதுக்கடைகளை மூடிவிட்டால், அரசுக்கு வருமானம் இருக்காது என்று சொல்கிறார்கள். ஆனால், மது விற்பனை இல்லாமல், எப்படி வருவாயை ஈட்ட முடியும் என்பது குறித்து 25 ஆண்டுகளுக்கு முன்னரே, நாங்கள் புத்தகம் வெளியிட்டு விட்டோம்.

பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளும் என்ன வரம் வேண்டும் என்று கேட்டால், தமிழகத்தில் ஒரு சொட்டு மழைநீர் கூட, கடலில் வீணாகச் சென்று கலக்கக் கூடாது என்று ஒரு வரமும், தமிழகத்தில் ஒரு சொட்டு மதுவும் இருக்கக் கூடாது என மற்றொரு வரமும் கேட்பேன். மேலும், கொசுறு வரமாக, தமிழகத்தில் கஞ்சா இருக்கக் கூடாது என்றும் கேட்பேன். அனைத்து சமுதாய மக்களுக்கும் இட ஒதுக்கீடு வாங்கிக் கொடுத்தோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் அனைத்து சமுதாய மக்களையும் ஒரு தாய் மக்களாக, நினைத்து, அவர்களுக்காக நாங்கள் பாடுபடுவோம், என்றார்.

பாடம் புகட்டுவர்... பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில், “விழுப்புரத்தில் வன்னியர் இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்நீத்தோருக்கான மணிமண்டபத் திறப்பு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், வன்னியர்களுக்கு 10.50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதுகுறித்த மனுக்களைக்கூட உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் முதல்வரிடம் அளிக்க விடாமல் அதிகாரிகளால் தடுக்கப்பட்டிருக்கின்றனர். இதற்கெல்லாம் வரும் தேர்தலில் தமிழக மக்கள் பாடம் புகட்டுவர்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்