புலியூர் கால்வாயில் பாதி உடைந்த நிலையில் பாலங்கள்: பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அச்சம்

By டி.செல்வகுமார் 


கோடம்​பாக்கம் மீனாட்சி கல்லூரி அருகில் இருந்து சூளைமேடு வழியாக செல்​லும் கூவம் ஆறு வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்​துக்கு புலியூர் கால்​வாய் உள்ளது. இந்த கால்​வா​யில் ஆக்கிரமிப்புகள் காரணமாக மழைக்​காலத்​தில் வெள்ள பாதிப்பு ஏற்படுவது வழக்​கம். இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெறுகிறது. ஆனால், பணிகள் ஆமைவேகத்​தில் பல ஆண்டு​களாக நடைபெறுகிறது.

இந்த கால்​வா​யில் வெள்​ளப்​பெருக்கு ஏற்பட்டு அப்பகு​தி மக்கள் பாதிக்​கப்​படு​வதை தடுப்​ப​தற்காக தூர்​வாரும் பணி மேற்​கொள்​ளப்​பட்​டது. இப்பணி​யின்​போது பொக்​லைன் இயந்​திரம் போய் வருவதற்கு வசதியாக கால்​வா​யின் குறுக்கே கட்டப்​பட்​டுள்ள பாலங்களை பாதியாக உடைத்​தனர். பக்கவாட்டு சுவரை​யும் குறிப்​பிட்ட தூரம் வரை இடித்​தனர். தூர்​வாரும் பணிகள் முடிவடைந்தன. ஆனால், உடைக்​கப்​பட்ட பாலங்கள் சரிசெய்​யப்​பட​வில்லை. பக்கவாட்டு சுவர்​களும் சீரமைக்​கப்​பட​வில்லை.

உதாரணத்​துக்கு, புலியூர் 1-வது பிரதான சாலை அருகே புலியூர் கால்​வா​யின் குறுக்கே கட்டப்​பட்​டுள்ள பாலம் தூர்​வாரும் பணிக்காக பல மாதங்​களுக்கு முன்பு இடிக்​கப்​பட்​டது. தற்போதும் பாதி உடைந்த நிலை​யிலேயே பாலம் காணப்​படு​கிறது. அதனால் அந்த வழியே நடந்து செல்​வோர், வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்​டுள்​ளது.

புலியூர் 1-வது பிரதான தெரு​வை சேர்ந்த ரவி என்பவர் கூறுகை​யில், “தூர்​வாரும் பணிக்காக கால்​வா​யின் குறுக்கே கட்டப்​பட்​டிருந்த பாலத்​தின் ஒருபகு​தியை உடைத்​தார்​கள். கால்​வா​யின் பக்கவாட்டு சுவரை​யும் இடித்​தனர். அப்பணிகள் முடிந்த பிறகும் பாலத்​தை​யும் பக்கவாட்டுச் சுவரை​யும் சீர்​செய்​யாமல் விட்டுச் சென்​று​விட்​டனர்.

எனவே, அந்த பாலத்​தின் வழியே லாரி போன்ற கனரக வாகனங்கள் வந்தால், அந்த வழியே நடந்து செல்​வோரும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்​துக்கு ஆளாகின்​றனர். இதுகுறித்து மாநக​ராட்சி அதிகாரி​களின் கவனத்​துக்கு எடுத்​துச் சென்​றும் இதுவரை பாலத்​தின் உடைந்த பகுதி​யும், கால்​வா​யின் பக்கவாட்டு சுவரும் சீர்​செய்​யப்​பட​வில்லை” என்று வேதனை​யுடன் தெரி​வித்​தார்.

அதுபோல மைனர் டிரஸ்ட்​புரம் 3-வது குறுக்கு தெரு​வில் உள்ள பாலத்​தின் நிலைமை இன்ன​மும் மோசம். அந்த பாலமும் பாதிக்​கும் மேல் உடைந்த நிலை​யில் இருக்​கிறது. எனவே, அவ்வழியே நடந்து செல்​வோரும், வாகன ஓட்டிகளும் மிகுந்த எச்சரிக்கை​யுடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மேற்​கண்ட 2 பாலங்​களி​லும், எச்சரிக்கை பலகை எதுவும் வைக்​கப்​பட​வில்லை. மரச்​சட்​டங்​களால் தடுப்பும் அமைக்க​வில்லை. இரவு நேரத்​தில் ஒளிரும் பட்டைகள் பொருத்​தப்​பட​வில்லை. பெரிய அசம்​பா​விதம் ஏற்படும் முன் தேவையான பாது​காப்பு ஏற்பாடு​களை செய்ய வேண்​டும் என்று
புலியூர் பகுதி மக்கள் எதிர்​பார்க்​கின்​றனர்.

இதுகுறித்து 112-வது வார்டு கவுன்​சிலர் எலிசபெத் அகஸ்​டியனிடம் கேட்​ட​போது, “புலியூர் ​கால்​வா​யின் உடைந்த பாலங்​களில் தேவையான எச்​சரிக்கை அறி​விப்பு பலகை வைக்​க​வும், ​போதிய பாது​காப்பு ஏற்​பாடு​களை செய்​ய​வும் அதிகாரி​களை தொடர்பு கொண்டு உடனடி நட​வடிக்கை எடுக்​கப்​படும்” என உறு​தி அளித்​தார்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்