புலியூர் கால்வாயில் பாதி உடைந்த நிலையில் பாலங்கள்: பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அச்சம்

By டி.செல்வகுமார் 


கோடம்​பாக்கம் மீனாட்சி கல்லூரி அருகில் இருந்து சூளைமேடு வழியாக செல்​லும் கூவம் ஆறு வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்​துக்கு புலியூர் கால்​வாய் உள்ளது. இந்த கால்​வா​யில் ஆக்கிரமிப்புகள் காரணமாக மழைக்​காலத்​தில் வெள்ள பாதிப்பு ஏற்படுவது வழக்​கம். இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெறுகிறது. ஆனால், பணிகள் ஆமைவேகத்​தில் பல ஆண்டு​களாக நடைபெறுகிறது.

இந்த கால்​வா​யில் வெள்​ளப்​பெருக்கு ஏற்பட்டு அப்பகு​தி மக்கள் பாதிக்​கப்​படு​வதை தடுப்​ப​தற்காக தூர்​வாரும் பணி மேற்​கொள்​ளப்​பட்​டது. இப்பணி​யின்​போது பொக்​லைன் இயந்​திரம் போய் வருவதற்கு வசதியாக கால்​வா​யின் குறுக்கே கட்டப்​பட்​டுள்ள பாலங்களை பாதியாக உடைத்​தனர். பக்கவாட்டு சுவரை​யும் குறிப்​பிட்ட தூரம் வரை இடித்​தனர். தூர்​வாரும் பணிகள் முடிவடைந்தன. ஆனால், உடைக்​கப்​பட்ட பாலங்கள் சரிசெய்​யப்​பட​வில்லை. பக்கவாட்டு சுவர்​களும் சீரமைக்​கப்​பட​வில்லை.

உதாரணத்​துக்கு, புலியூர் 1-வது பிரதான சாலை அருகே புலியூர் கால்​வா​யின் குறுக்கே கட்டப்​பட்​டுள்ள பாலம் தூர்​வாரும் பணிக்காக பல மாதங்​களுக்கு முன்பு இடிக்​கப்​பட்​டது. தற்போதும் பாதி உடைந்த நிலை​யிலேயே பாலம் காணப்​படு​கிறது. அதனால் அந்த வழியே நடந்து செல்​வோர், வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்​டுள்​ளது.

புலியூர் 1-வது பிரதான தெரு​வை சேர்ந்த ரவி என்பவர் கூறுகை​யில், “தூர்​வாரும் பணிக்காக கால்​வா​யின் குறுக்கே கட்டப்​பட்​டிருந்த பாலத்​தின் ஒருபகு​தியை உடைத்​தார்​கள். கால்​வா​யின் பக்கவாட்டு சுவரை​யும் இடித்​தனர். அப்பணிகள் முடிந்த பிறகும் பாலத்​தை​யும் பக்கவாட்டுச் சுவரை​யும் சீர்​செய்​யாமல் விட்டுச் சென்​று​விட்​டனர்.

எனவே, அந்த பாலத்​தின் வழியே லாரி போன்ற கனரக வாகனங்கள் வந்தால், அந்த வழியே நடந்து செல்​வோரும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்​துக்கு ஆளாகின்​றனர். இதுகுறித்து மாநக​ராட்சி அதிகாரி​களின் கவனத்​துக்கு எடுத்​துச் சென்​றும் இதுவரை பாலத்​தின் உடைந்த பகுதி​யும், கால்​வா​யின் பக்கவாட்டு சுவரும் சீர்​செய்​யப்​பட​வில்லை” என்று வேதனை​யுடன் தெரி​வித்​தார்.

அதுபோல மைனர் டிரஸ்ட்​புரம் 3-வது குறுக்கு தெரு​வில் உள்ள பாலத்​தின் நிலைமை இன்ன​மும் மோசம். அந்த பாலமும் பாதிக்​கும் மேல் உடைந்த நிலை​யில் இருக்​கிறது. எனவே, அவ்வழியே நடந்து செல்​வோரும், வாகன ஓட்டிகளும் மிகுந்த எச்சரிக்கை​யுடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மேற்​கண்ட 2 பாலங்​களி​லும், எச்சரிக்கை பலகை எதுவும் வைக்​கப்​பட​வில்லை. மரச்​சட்​டங்​களால் தடுப்பும் அமைக்க​வில்லை. இரவு நேரத்​தில் ஒளிரும் பட்டைகள் பொருத்​தப்​பட​வில்லை. பெரிய அசம்​பா​விதம் ஏற்படும் முன் தேவையான பாது​காப்பு ஏற்பாடு​களை செய்ய வேண்​டும் என்று
புலியூர் பகுதி மக்கள் எதிர்​பார்க்​கின்​றனர்.

இதுகுறித்து 112-வது வார்டு கவுன்​சிலர் எலிசபெத் அகஸ்​டியனிடம் கேட்​ட​போது, “புலியூர் ​கால்​வா​யின் உடைந்த பாலங்​களில் தேவையான எச்​சரிக்கை அறி​விப்பு பலகை வைக்​க​வும், ​போதிய பாது​காப்பு ஏற்​பாடு​களை செய்​ய​வும் அதிகாரி​களை தொடர்பு கொண்டு உடனடி நட​வடிக்கை எடுக்​கப்​படும்” என உறு​தி அளித்​தார்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்