சென்னையில் ஜன.29-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் வரும் ஜன.29-ம் தேதி, திமுக எம்.பி.க்கள் கூட்டம், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், வரும் ஜன.29-ம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் நடைபெறும்.

இதில், கட்சியின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இக்கூட்டத்தில் மத்திய அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்