வெம்பக்கோட்டையில் பீங்கான், மாவுக்கல் மணிகள் கண்டெடுப்பு: அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் தகவல்

By செய்திப்பிரிவு

சாத்தூர்: ​விருதுநகர் மாவட்டம் வெம்​பக்​கோட்​டை​யில் நடைபெற்று​வரும் அகழாய்வில் பீங்​கானால் தயாரிக்​கப்​பட்ட உருண்டை வடிவ மணி, மாவு கற்களால் செய்​யப்​பட்ட நீள் வட்ட வடிவ மணிகள், அலங்​கரிக்​கப்​பட்ட சங்கு வளையல்கள் கண்டெடுக்​கப்​பட்டன.

விருதுநகர் மாவட்டம் வெம்​பக்​கோட்டை விஜயகரிசல்​குளத்​தில் 3-ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. சுடுமண் உருவப் பொம்மை, கண்ணாடி மணிகள், சங்கு வளையல்​கள், வட்டச்​சில்லு, தங்கமணிகள் என‌ இதுவரை 2,850-க்​கும் மேற்​பட்ட பொருட்கள் கண்டெடுக்​கப்​பட்​டுள்ளன.

இந்நிலை​யில், புதிதாக தோண்​டப்​பட்ட குழி​யில் பீங்​கானால் தயாரிக்​கப்​பட்ட உருண்டை வடிவமணி, மாவு கற்களால் செய்​யப்​பட்ட நீள்வட்ட வடிவ மணிகள், அலங்​கரிக்​கப்​பட்ட சங்கு வளையல்கள் போன்றவை கண்டெடுக்​கப்​பட்​டுள்ளன. இதுகுறித்து அகழாய்வு இயக்​குநர் பாஸ்கர் கூறுகை​யில், புதிதாக கண்டெடுக்​கப்​பட்​டுள்ள இந்த பொருட்களை வட மாநிலங்​களில் இருந்து வாங்கி, பண்டைய தமிழர்​கள் வாணிபத்​தில் ஈடு​பட்​டுள்ளது தெரிய வரு​கிறது என்​றார்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்