சென்ட்ரல் - அரக்கோணம், கும்மிடிபூண்டி வழித்தடத்தில் தினமும் தாமதம்: பரிதவிக்கும் ரயில் பயணிகள் 

By ப.முரளிதரன்

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், கும்மிடிப்​பூண்டி வழித்​தடத்​தில் மின்சார ரயில்கள் நாள்​தோறும் தாமதமாக இயக்​கப்​படு​வதால், அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த சிரமத்​துக்கு உள்ளாகி வருகின்​றனர்.

சென்னை சென்ட்​ரலில் இருந்து அரக்​கோணம், திருத்​தணி, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங், கும்​மிடிப்​பூண்டி, சூளூர்​பேட்டை ஆகிய புறநகர் பகுதி​களுக்கு தினசரி 320 மின்சார ரயில் சேவைகள் இயக்​கப்​படு​கின்றன. மேற்​கண்ட வழித்​தடத்​தில் மட்டும் நாள்​தோறும் 6 லட்சம் பேர் பயணிக்​கின்​றனர். இந்நிலை​யில், தண்டவாள பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் காரணமாக 52 ரயில் சேவைகள் 6 மாதங்​களுக்கு முன்பு ரத்து செய்​யப்​பட்டன. அத்துடன், இயக்​கப்​படும் ரயில்​களும் குறித்த சமயத்​தில் அல்லாமல் தாமதமாக இயக்​கப்​படு​வ​தால், தினசரி பணிக்கு செல்​லும் ஊழியர்​கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பரிதவிப்​புக்கு ஆளாகி வருகின்​றனர்.

இதுகுறித்து, ஆவடியை சேர்ந்த ரயில் பயணி சீனிவாசன் என்பவர் கூறிய​தாவது: புரசை​வாக்​கத்​தில் பணிபுரி​கிறேன். ஆவடி​யில் இருந்து சென்ட்ரல் வரை ரயிலில் சென்று, அங்கிருந்து பேருந்து மூலம் அலுவலகம் செல்​வேன். ஆவடி​யில் இருந்து சென்னை சென்ட்​ரலுக்கு செல்ல 45 நிமிடங்கள் போதும். ஆனால், தற்போது ரயில்கள் தாமதமாக இயக்​கப்​படு​வ​தால் ஒருமணி நேரத்​துக்​கும் மேல் ஆகிறது. பராமரிப்பு என்ற பெயரில் ரயில் சேவை குறைக்​கப்​பட்​டதோடு, இயக்​கப்​படும் ரயில்​களும் தாமதமாக இயக்​கப்​படு​கின்றன. திரு​வள்​ளூரில் இருந்து சென்ட்​ரலுக்கு இயக்​கப்​படும் ரயில் காலை 10.25 மணிக்கு ஆவடிக்கு வர வேண்​டும். ஆனால், பெரும்​பாலான நாட்​களில் இந்த ரயில் குறைந்தது 15 நிமிடங்​களாவது தாமதமாக வருகிறது. இதேபோல​தான், பெரும்​பாலான ரயில்​களும் தாமதமாக இயக்​கப்​படு​கின்றன.

அத்துடன், இயக்​கப்​படும் ரயில்​களும் ஒரு குறிப்​பிட்ட இடைவெளி​யில் இயக்​கப்​படுவது கிடை​யாது. உதாரண​மாக, திருத்​தணியில் இருந்து சென்ட்​ரலுக்கு இயக்​கப்​படும் மெமூ ரயில் காலை 11.05 மணிக்கு ஆவடிக்கு வரும். இந்த ரயிலை​விட்​டால், சென்ட்​ரலுக்கு அடுத்த ரயில் 11.50-க்​குத் தான் வரும். அதாவது, சுமார் 45 நிமிடத்​துக்கு சென்ட்​ரலுக்கு ரயில் சேவை கிடை​யாது. இதனால் பயணிகள் தவிக்​கும் நிலை ஏற்படு​கிறது. அதே சமயம், 11.50 மணிக்கு பிறகு 10 நிமிட இடைவேளை​யில் நண்பகல் 12 மணிக்கு சென்ட்​ரலுக்கு ஒரு ரயில் இயக்​கப்​படு​கிறது. எனவே, இயக்​கப்​படும் ரயில்கள் 10 அல்லது 15 நிமிட சீரான இடைவெளி​யில் இயக்​கப்​பட்​டால் பயணி​களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்​கும்.

சீனிவாசன்

ரயில்​களின் தாமதம் குறித்து ரயில் நிலை​யங்​களில் முன்​கூட்​டியே அறிவிப்பு செய்​வ​தில்லை. ரயில் வருவதற்கு கடைசி நிமிடத்​தில் தான் அறிவிப்பு செய்​யப்​படு​கிறது. இதனால், பயணிகள் முன்​கூட்​டியே தங்களது பயண திட்​டத்தை மாற்ற முடியாத நிலை உள்ளது. தற்போது, பெரும்​பாலான ரயில் நிலை​யங்​களில் பணிபுரி​யும் நிலைய மேலா​ளர்கள் வடமாநிலத்தை சேர்ந்​தவர்​களாக உள்ளனர். அவர்​களுக்கு தமிழ் தெரி​யாத​தால், மொழி பிரச்​சினை காரணமாக அவர்​களிடம் ரயில்கள் தாமதம் குறித்து புகார் தெரிவிக்க முடிய​வில்லை.

மேலும், பயணிகள் செல்​லும் ரயிலுக்கு முன்னுரிமை வழங்​காமல், பணிமனைக்கு செல்​லும் ரயிலுக்கு முன்னுரிமை வழங்​கப்​படு​கிறது. திரு​வள்​ளூர், அரக்​கோணத்​துக்கு செல்​லும் ரயில்கள் இரவு நேரங்​களில் ஆவடி ரயில் நிலை​யத்​துக்கு வெளியே சிக்னல் கிடைக்​காமல் 10 முதல் 20 நிமிடங்கள் நிற்க வைக்​கப்​படு​கிறது. இதனால், பணி முடிந்து களைத்து போய் வீடு திரும்​புவோர் கடும் அவதிக்கு ஆளாகின்​றனர். மொத்​தத்​தில் பயணி​களின் வசதிக்காக ரயில்களை இயக்​காமல், அதிகாரிகள் தங்களின் வசதிக்காக ரயில்களை இயக்கு​கின்​றனரா என்றே எண்ணத் தோன்​றுகிறது. இவ்வாறு அவர் தெரி​வித்​தார்.

கொரட்​டூரை சேர்ந்த பெண் பயணி கீதா என்பவர் கூறிய​தாவது: தலைமை செயல​கத்​தில் பணிபுரி​கிறேன். கடற்கரை செல்​லும் ரயிலில் பயணிப்​பேன். தினமும் இந்த ரயில்கள் வியாசர்​பாடி​யில் இருந்து கடற்கரை ரயில் நிலையம் வரை ஆங்காங்கே நிறுத்தி இயக்​கப்​படு​கிறது. இதனால், தினமும் தாமதமாக அலுவலகம் செல்ல வேண்டி உள்ளது.

கீதா

இதனால், சில நேரங்​களில் சென்ட்ரல் வரை ரயிலில் சென்​று​விட்டு பின்னர் அங்கிருந்து ஆட்டோ மூலம் அலுவலகம் செல்​கிறேன். இதனால், பண விரயம், நேர விரயம் ஏற்படு​கிறது. அத்துடன், பீக் ஹவர் நேரங்​களில் 12 பெட்​டிக்​கு பதிலாக, 9 பெட்​டிகள் மற்றும் 8 பெட்​டிகள் கொண்ட ‘மெமூ’ ரயில்கள் இயக்​கப்​படு​வ​தால், கூட்ட நெரிசலில் சிக்கி பயணிக்க வேண்டி உள்ளது. இதனால், என்னை போன்ற பெண் பயணிகள் கடும் சிரமத்தை சந்திக்​கின்​றனர். இவ்வாறு அவர் தெரி​வித்​தார்.

இதுகுறித்து, ரயில்வே அதிகாரி​களிடம் கேட்​ட​போது, ரத்து செய்​யப்​பட்ட ரயில் சேவைகள் பராமரிப்பு பணி முடிந்​ததும் மீண்​டும் இயக்​கப்​படும். மின்சார ரயில்கள் தற்போது 95% சரியான நேரத்​தில் இயக்​கப்​படுகிறது. ஒருசில நேரங்​களில் தவிர்க்க முடியாத காரணத்​தால் தாமதமாக இயக்​கப்​படு​கிறது. ரயில்கள் தாமதமாக வந்தால் முன்​கூட்​டியே அறிவிப்பு செய்ய வேண்டுமென நிலைய மேலா​ளர்​களுக்கு அறிவுறுத்​தப்​படும். தற்போது இயக்​கப்​படும் மொத்த ர​யில்​களில் 4 ர​யில்​கள் மட்டுமே 9 பெட்​டிகளை ​கொண்டு இயக்​கப்​படு​கிறது. அவை இந்த ​மாதத்​துக்​குள் 12 பெட்​டிகளாக ​மாற்​றப்​பட்டு​விடும். வட​மாநிலத்​தை சேர்ந்த ர​யில் நிலைய மேலா​ளர்​களின் மொழி பிரச்​சினையை தீர்க்க ​விரை​வில் நட​வடிக்கை எடுக்​கப்​படும்​ என்றனர்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்