விஎச்பி நிகழ்ச்சியில் பங்கேற்ற நீதிபதி பதவி நீக்க அறிவிப்பில் கையெழுத்திடாதது ஏன்? - அதிமுகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.​முத்​தரசன் நேற்று வெளி​யிட்ட அறிக்கை: கடந்த 8-ம் தேதி உத்தரப்​பிரதேசம், அலகா​பாத் உயர் நீதி​மன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ், அங்கு நடந்த விஸ்வ இந்து பரிஷத் நிகழ்ச்​சி​யில் பங்கேற்றுள்ளார்.

இந்த அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்​வில் நீதிபதி எந்த முறை​யில் கலந்து கொண்​டாரா என்ற வினா எழுகிறது. சட்ட​வி​திகளை மீறி இந்த நிகழ்​வில் கலந்து கொண்ட நீதிபதி சேகர் குமார் யாதவ், முஸ்​லிம் சமூகத்​துக்கு எதிராக விஷம் கக்கும் வெறுப்பு பேச்​சும் பேசியுள்​ளார்.

நீதித் துறை​யின் மாண்​புக்கு களங்கம் ஏற்படுத்தி, அரசி​யலமைப்பு சட்டத்​தின் அடிப்​படையான மதச்​சார்​பற்ற பண்பை தகர்த்து, அநாகரி​கமாக செயல்​பட்ட, அலகா​பாத் உயர் நீதி​மன்ற நீதிபதி சேகர் குமார் யாதவுக்கு கண்டனம் தெரிவிக்​க​வும், அவரை நீதிபதி பொறுப்​பில் இருந்து நீக்​க​வும், நாடாளு​மன்ற விதி​முறைகளை பின்​பற்றி எதிர்க்​கட்சி மாநிலங்​களவை உறுப்​பினர்கள் ‘இம்​பீச்​மெண்ட்’ அறிவிப்பு கொடுத்​துள்ளனர். இந்த அறிவிப்​பில் அஇஅதிமுக கையெழுத்து போடவில்லை என்பது அதன் சந்தர்ப்​பவாத செயலை வெளிப்​படுத்து​கிறது.

பாஜகவோடு கூட்டணி இல்லை எனில், நீதிப​தி​யின் வகுப்புவாத வெறுப்​பேற்றும், மதவெறி வன்ம பேச்சை கண்டித்து, மாநிலங்களவை உறுப்​பினர்கள் 55 பேர் கையெழுத்​திட்டு மாநிலங்​களவை செயலாளரிடம் கொடுத்​துள்ள அறிவிப்பு கடிதத்​தில் அதிமுக உறுப்​பினர்கள் கையெழுத்​துப் போடாமல் நழுவிக் கொண்டது ஏன்? இதுகுறித்து நாட்டு மக்களுக்கு அஇஅதிமுக விளக்க வேண்டும். இவ்​வாறு ​தெரி​வித்​துள்ளார்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்