போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு நிலுவை அகவிலைப்படி உயர்வுக்கு ரூ. 3028 கோடி நிதி தேவைப்படும்

By செய்திப்பிரிவு

சென்னை: போக்கு​வரத்து ஓய்வூ​தி​யர்​களுக்கு நிலுவை அகவிலைப்படி உயர்வு வழங்க ரூ.3,028 கோடி தேவைப்​படும் என போக்குவரத்​துத் துறை தெரி​வித்​துள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் கூறிய​தாவது: நிதி பற்றாக்​குறை உள்ளிட்ட காரணங்​களால் போக்கு​வரத்​துக் கழக ஓய்வூ​தி​யர்​களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் முதல் அகவிலைப்படி உயர்வு வழங்​கப்​பட​வில்லை.

இதுதொடர்பாக நீதி​மன்​றத்​தில் உள்ள பல்வேறு வழக்​கு​களில் அகவிலைப்படி உயர்வு வழங்க உத்தர​விடப்​பட்​டுள்​ளது. இதன் தொடர்ச்​சியாக அகவிலைப்படி உயர்வு வழங்க தேவையான தொகை குறித்து கணக்​கீடு செய்​யப்​பட்​டது. அதன்​படி, நடப்​பாண்டு அக்டோபர் மாதம் வரையிலான கால கட்டத்​தில் அகவிலைப்படி உயர்வு வழங்க ரூ.3,028.75 கோடி தேவைப்​படு​கிறது. மேலும், மாதந்​தோறும் அகவிலைப்படி உயர்வு அளிக்க வேண்​டு​மானால் கூடு​தலாக ரூ.73.42 கோடி தேவைப்​படு​கிறது. இதனை வழங்​குவது குறித்து அரசு முடிவு செய்​யும். இவ்வாறு அவர்கள் தெரி​வித்​தனர்.

இதுதொடர்பாக தொழிற்​சங்​கத்​தினர் கூறும்​போது, "அகவிலைப்படி உயர்வு வழங்​கு​வதற்கு எதிரான அரசின் மேல்​முறை​யீட்டு மனுக்கள் நீதி​மன்​றத்​தால் தொடர்ச்​சியாக தள்ளுபடி செய்​யப்​படு​கின்றன. எனவே, காலம் தாழ்த்​தாமல் குறைவாக ஓய்வூ​தியம் பெறும் ஓய்வூ​தி​யர்​களின் நலன் கருதி அகவிலைப்படி உயர்வு வழங்க அரசு முன்வர வேண்​டும்" என்றனர்.

பணப்​பலன்கள் எப்போது? - போக்கு​வரத்து ஓய்வூ​தி​யர்​களுக்கு பல்வேறு பிரச்​சினைகள் இருந்து வருகிறது. அவர்​களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்வு மறுக்​கப்​பட்​டுள்​ளது. நிதி பற்றாக்​குறையை காரணம் காட்டி ஓய்வு பெறும் ஊழியர்​களுக்கு ஓய்வு பெறும் நாளில் ஓய்வு கால பணப்​பலன்கள் வழங்​கப்​படு​வ​தில்லை. ஓய்வு பெறு​வோர் வெறும் கையுடன் வீட்டுக்கு அனுப்​பப்​படு​வதாக தொழிற்​சங்​ககத்​தினர் தொடர் குற்​றச்​சாட்டை முன்​வைத்து வருகின்​றனர். இது தொடர்பாக பல்வேறு கட்ட போராட்​டங்​களும் நடத்​தப்​பட்​டுள்ளன.

அரசின் பதில்: இந்நிலை​யில், பணப்​பலன் வழங்​குவது தொடர்பாக தொழிற்​சங்​கத்​தினர் தரப்​பில் அரசிடம் கேள்வி எழுப்​பப்​பட்​டிருந்​தது. இதற்கு மாநகர போக்கு​வரத்​துக் கழகத்​தின் தலைமை நிதி அலுவலர் அளித்த பதிலில், "தமிழ்​நாடு அரசு போக்கு​வரத்​துக் கழக ஓய்வூதிய நிதி​யத்​தின் மூலம் ஆணை பெறப்​பட்​ட​வுடன், 2023-ம் ஆண்டு ஏப்​ரல் ​முதல் ஓய்வு பெற்​றவர்​களுக்​கு பணப்​​பலன்​ வழங்​க நட​வடிக்​கை மேற்​கொள்​ளப்​படும்​" என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்