நாகை மீனவர்கள் 12 பேரை விடுவிக்க நடவடிக்கை: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நாகப்பட்டினம் மீனவர்கள் 12 பேரையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் எழுதியுள்ள கடிதம்: நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த 26-ம் தேதி, படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்தபோது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவது, இந்தியாவில், குறிப்பாக தமிழகத்திலுள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தஆண்டில் இதுவரை 30 சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த 27-ம் தேதி நிலவரப்படி 140 மீனவர்கள் மற்றும் 200 மீன்பிடிப் படகுகள் இலங்கை அரசு வசம் உள்ளன. எனவே, இந்த பிரச்சினையை முன்னுரிமை அடிப்படையில் எடுத்துச் சென்று, இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்