தமிழக மீனவர்கள் 15 பேருக்கு 3-வது முறையாக காவல் நீட்டிப்பு

By எஸ். முஹம்மது ராஃபி


ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேருக்கு மூன்றாவது முறையாக நவம்பர் 11 வரையிலும் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்குதளங்களிலிருந்து கடலுக்குச் சென்ற வைத்தியநாதன், மூர்த்தி, அஞ்சலி தேவி ஆகியோருக்குச் சொந்தமான படகுகளில் சென்ற ஆகிய 15 மீனவர்கள் அக்.9-ல் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து 15 மீனவர்களும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஷ்கரன், இவர்கள் அனைவருக்கும் நவ.11-ம் தேதி வரை மூன்றாவது முறையாக காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் 15 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்