தமிழகத்தில் சில இடங்களில் நவ.2 வரை மழை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அக். 27-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 8 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் மைலாடி, தக்கலை ஆகிய இடங்களில் 7 செ.மீ., நாகர்கோவில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளை ஆகிய இடங்களில் 5 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர், பேச்சிப்பாறை, மற்றும் தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தென்னிந்திய கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வரும் 31-ம் தேதி முதல் நவ. 2-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில்லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்