சென்னை: சென்னையை அடுத்த ஶ்ரீபெரும்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 36-வது நாளாக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்கள் குழுவை முதல்வர் ஸ்டாலின் நியமனம் செய்திருந்தார்.
ஏற்கெனவே இது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், சாம்சங் விவகாரம் தொடர்பாக சி.ஐ.டி.யு மற்றும் ஊழியர்களிடம் அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். சென்னை தலைமை செயலகத்தில் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா,தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், சிறு குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் சிஐடியு மாநில தலைவர் சவுந்தராஜன், மாநில செயலாளர் முத்துகுமார் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago